Wednesday 10 July 2013

திருமந்திரம் கூறும் சத்தியம் இதுவே!

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே”

திருமந்திரம் கூறும் சத்தியம் இதுவே! தமிழ் மறையான இதுவே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை ஞானம்! இறை இரகசியம்!

நம் உடலாகிய கோயிலில் உயிராக தானே வீற்றிருக்கிறான் எல்லாம் வல்ல இறைவன்! இறைவன் பெருஞ்ஜோதியானவன் எங்கும் நிறைந்தவன்! இறைவனே ஜீவனாக சிறு ஜோதியாக நம் உடலில் உறைந்துள்ளான்! என்ன விந்தை இது?! அவனே படைத்து, காத்து, அழித்து, எதற்கு இந்த நாடகம்?! ஏனிந்த திருவிளையாடல்!?

இன்றுவரை இந்த உலகில் தோன்றிய மதங்களும், மார்க்கங்களும், மகான்கள் அனைவரும் சொன்னதும் ஒப்புக்கொண்டதும் இந்த உண்மை ஒன்றையே! இறைவன் ஒருவரே அவர் ஜோதி ஸ்வரூபம்! நம் உடலில் உயிராக இருப்பதும் அவரே! அவனின்றி ஓர் அணுவும் அசையாது! இதை மறுப்பவர் யாருமில்லை! எம்மதமும் இந்த உண்மைகளை மறுத்ததில்லை! உலகர் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரே உண்மை இது ஒன்றே!!

எல்லாம் வல்ல இறைவன் பெருஞ்ஜோதிமயமானவன் என்றும் அவனே சிறுஜோதியாக நம் உடலில் உயிராக இருக்கின்றான் என்பதும் தான் மனிதனாக பிறந்த நாம் அரிய வேண்டிய மாபெரும் இரகசியம்!

இதை அறிந்தவன், தகுந்த குருமூலம் உணர்ந்தவன் தான் ஞானம் பெறுவான்! அறிந்தால் மட்டும் போதாது! குருமூலம் தீட்சை மூலம் உணரவும் வேண்டும்! தவம் செய்யவும் வேண்டும்! அப்போதுதான் ஞானம் கிட்டும்! இறையருள் பெறலாம்!

இந்த ஞான இரகசியத்தை அறியாமல் இந்த உலகில் நீங்கள் வேறு எதை செய்தாலும் ஞானம் கிட்டாது!?

தன் உயிரை அறிவதே, உணர்வதே இறைவனை அறிவதும் உணர்வதுமாகும்! தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும்! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

உயிர் நம் உடலில் எங்கிருக்கிறது? என தெரிந்தால் தானே! எப்படி இருக்கிறது என்று தெரிந்தால் தானே தவம் செய்ய முடியும்?!

கடோபநிசத்தில் எமதர்மனிடம் நசிகேசன் உயிர் பற்றி, கடவுள் பற்றி கேட்க அவர் கூறுகிறார், “இறைவன் மனிததேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் புகையில்லாத ஜோதியாக விளங்குகிறான்”. என்று!? இதில் உடனே நாம் இரு விசயங்களை தெரிந்துகொள்ளலாம். ஒன்று இறைவன் மனித தேகத்திலும் உள்ளார் என்பது!

மனித தேகத்தில் உள்ளார் சரி!? நாம் வெளியே பார்க்கும் ஜோதி – தீ புகையுள்ளது இறைவன் பெருஞ்ஜோதியானவன் – தீ வண்ணன் புகையில்லாத ஜோதிஸ்வருபம் இதுவும் சரி!? நம் உடலில் எங்கிருக்கிறது? அந்த ஜோதி – உயிர் – இறைவன்? சின்முத்திரை அளவான இடம்! இதுதான் மாபெரும் இரகசியம்! குருஊபதேசம் மூலம் அரிய வேண்டியது! அடியேன் இங்கே குரு எங்களுக்கு உபதேசித்ததை எழுதுகிறேன்!

நன்றாக கவனமாக பாருங்கள்! மனித தேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் உள்ளார்! சின்முத்திரை பிடித்துக் கொண்டு உட்கார சொல்லவில்லை! சின்முத்திரை பிடித்தால் அதாவது நமது கை பெருவிரலும் ஆள்காட்டி விரலும் தொட்டுக் கொண்டநிலை அல்ல! ஆள்காட்டி விரல் மடக்கி பெருவிரலின் மத்தியிலுள்ள கோடை தொட்ட நிலையில் மற்ற மூன்று விரலும் நீட்டியபடி இருப்பதே “சின்முத்திரை”!

இப்படி சின்முத்திரை பிடித்தநிலையில் கை பெருவிரல் மத்தியிலுள்ள கோடு வரை உள்ள இடமே நம் கண் அளவு! வைத்துப் பாருங்கள்! சின்முத்திரை – கண்போல தோன்றும்! அதாவது இறைவன் மனித தேகத்தில் கண்ணில் ஜோதியாக துலங்குகிறான் என்பதே மாபெரும் ஞான இரகசியாமாம்!

Tuesday 9 July 2013

பிறப்பின் இரகசியம்.

மனிதன்! உயிர் இருந்தால் தான்? இல்லையேல் பிணம்!

மனிதர்களாகிய நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம்! இல்லையேல் நாம் சவம்!

உயிர் இருந்தால் தான் வாழ்வு! உயிர் உடலைவிட்டு போய்விட்டால்? சாவுதான்!

உடலும் உயிரும் சேர்ந்திருந்தாலே பிரயோஜனம்! பிரிந்திருந்தால் இயக்கம் இல்லை! உடலோடு உயிர் இருந்தாலே இயக்கம்!

உடலைவிட உயிரே முக்கியமானது!

உயிர் உடலுடன் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன்.

இப்படி “தலை கால்” தெரியாமல் ஆடுபவனெல்லாம் அடிமுட்டாள்களே!

ஒருவன் எப்படி பிறக்கிறான்?

பிறப்பு என்றால் என்ன? ஏன் பிறக்கிறான்?

இதுதான் “தேவரகசியம்”. பிறப்பின் இரகசியம்.

ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறந்து விடுமா? நடக்காது!?

இன்றைக்கும் குழந்தையில்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்களே?

விஞ்ஞான வளர்ச்சி, டெஸ்ட்டியுப் குழந்தை உருவானது. ஆயிரம் பல்லாயிரம் முயற்சி செய்தால் ஒன்று உருவாகிறது! எல்லாம் ஜனிப்பதில்லை! எல்லோராலும் முடியாது!

விஞ்ஞானம் ஒரு வரையரைக்கு உட்பட்டதே! இன்றைய உலக வளர்ச்சி விஞ்ஞானத்தின் பரிமாணம் தான் மறுக்க முடியாது!

பஞ்சபூதங்களை அப்படி இப்படி, எதையாவது செய்து ஏதோதோ கண்டுபிடித்து சுகபோகமாக வாழ வழி கண்டனர் பலர்!

எல்லோரும் இந்த பூமியில் உள்ளவர்கள் தானே! இந்த பூமியில்தானே பிறந்தார்கள், இந்த பூமியில் தானே, எப்படியெப்படியோ வாழ்ந்து மடிந்தார்கள்.

இந்த மனிதர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? பூமியில் கொஞ்சகாலம் வாழ்ந்தார்கள்! எல்லோரும் – பெரும்பாலானவர்கள் இறந்துபோயினர்! இறந்து அவர்கள் போனது எங்கே!?

பிறந்தவர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? இறந்தவர்கள் எங்கு போனார்கள்? பிறந்தபோது வந்த உடல், இறந்தபோதும் இருக்கின்றதே?

அப்டியானால் பிறப்பு இறப்பு உடலுக்கு இல்லையே?! பின் எதற்கு? உயிர்கொண்டு உடல் வந்தாலே பிரயோஜனம்! உயிர் இன்றி உடல் இருந்தால் மண்தான்!.

உயிர்தான் பிரதானம்! உயிர்தான் பிறக்கிறது உடல் கொண்டு! உடலைவிட்டு உயிர் பிரிவதே மரணம்! பிறப்பும், இறப்பும் உயிர் வருவதும் போவதும் தான்!

நம்மை ஈன்ற தாய் நமக்கு கொடுத்தது உடல் மட்டுமே! அன்னையின் உடலில் உடலிலிருந்து மாதந்தோறும் வெளியேறும் உதிரமே, அன்னை தந்தையின் சுரோணித சுக்கில சேர்க்கையால் உருண்டு திரண்டு கருவாகி பிண்டம் உருவாகிறது!

தீட்டு என்கிறோமே – நம் உடலே தீட்டுதான்! நம் தாயின் தீட்டு தான் நாம்! மனிதன் மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளும் இப்படியே!

ஆணின் உயிர் சக்தி சுக்கிலம், பெண்ணின் உயிர் சக்தி சுரோணிதம் இரண்டும் சேர்ந்தால்தான் புதிய உயிர் தோன்றுவதற்கு அஸ்திவாரம்!

ஆணும் பெண்ணும், சிவமும் சக்தியும், பாஸிடிவ் நெகடிவ் சேர்ந்தாலே-இணைந்தாலே சக்தி பிறக்கும்-இயக்கம் ஆரம்பமாகும்!

தாயின் கருவிலே வயிற்றிலே உருவாகிறது பிண்டம், மூன்று மாதத்திற்கு பிறகு தான் உயிர் வருகிறது! இதுவே அற்புதம் கருவுக்கு உயிர் எப்படி வந்தது?

இங்கேதான் ஆரம்பிக்கிறது நமது மெய்ஞ்ஞானம்! தாயின் வயிற்றிலே குழந்தையின் உடல்தான் உருவாகிறது! உயிர் எல்லாம் வல்ல இறைவன் அருளால் வந்து சேர்க்கிறது!

இன்னாருக்கு இன்னார் வந்து பிறக்க வேண்டும் என்ற நியதி – விதி – கணக்கு எல்லாம் வல்லவன் வகுத்து வைத்தது! அவன் அருள் ஆக்ஞைபடியே உயிர் தாய் கருவிலே வருகிறது!

இதுவே தேவரகசியம்! எப்படி வருகிறது? யாரும் இதுவரை அறிந்திராத ஒன்று! இந்த காலத்தில் வருகிறது - வந்தது என்று அறியலாமே தவிர எப்படி வந்தது என அறிவார் இல்லை?!

“உயிர்” என்றால் என்ன? உயிர் எங்கிருந்தது? எப்படி உடலினுள் பிரவேசித்தது? உடலில் எங்கு இருக்கிறது? எந்த வடிவில் தன்மையில் இருக்கின்றது? இதையெல்லாம் அறிந்தவனே ஞானி!! அவனே சித்தன்!!

ஒரு சிசு தாயின் கருவிலே 10 மாதம் வளர்ந்து பூரணமாகிறது. ஒரு மாதம் என்பது 27 நாட்களே! 27 நட்சத்திரங்களே 1 மாதம். 10 மாதம் என்றால் 270 நாட்களே.

பிரசவ வலியே சிசுவின் பிரவேசத்திற்கு அறிகுறி! கன்னிக்குடத்திலே – குளத்திலே மிதந்து கொண்டு, ‘ஸ்டிரா” மூலம் குளிர்பானம் அருந்துவது போல, தொப்புள் கொடி மூலம் வேண்டிய உணவை தாயிடமிருந்து உறிஞ்சும் சிசு!

படைக்கும் பரமாத்மா உயிர்களை படைக்கும் ஆற்றல் இருக்கிறதே, அப்பப்பா அதிசயம்! அற்புதம்! எண்ணிப் பார்க்க இயலாத ஒப்பற்ற அதிஉன்னத செயலாகும்!

படைத்த பரமன் காக்க மாட்டானா? இறைவன் தான் நம்மை காப்பாற்றுகிறான்!! தாயின் கருவிலிருந்து எப்போதும் துணையாக இருந்து காப்பவன் இறைவன் மட்டுமே! கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் படியளப்பவன் காப்பவன் இறைவன் ஒருவனே!

நம்மை படைத்து காப்பவன் நம்மிடமிருந்து, நான் யார்? ஏன் பிறந்தேன்? எப்படி பிறந்தேன்? இதுபோன்ற எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமறியா குழந்தையாக்கி உலகில் விட்டுவிடுகிறான்! என்னே! அவனின் திருவிளையாடல்!

பிறப்பிக்க வைத்த அந்த இறைவனே எல்லா உயிர்களுக்கும் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிப்படுத்திக் காட்டு கின்றான்! ஆனால் அறிவோர் உணர்வோர் வெகுசிலரே! எல்லாம் வல்ல அந்த இறைவனே கருணையே உருவானவன்! அருங்கடல்! எல்லா உயிர்களும் தன்னை அடைய அருள்மழை பொழிகிறான்! மனிதனாக பிறக்கும் அனைவருக்கும் இறைவன் அருளும் அரிய சந்தர்ப்பம் இது!

மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும் எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர் வினைக்கு ஏற்ப வாழ்வை முடித்தும் வைக்கிறான்! அதாவது உடலை அழித்து அல்லது மாற்றி அவரவர் பரிபக்குவத்திற்குக்கேற்ற நிலையை தந்தருள்கிறார்!

எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே!
அவரே படைக்கிறார் அப்போது அவர் பிரம்மா!

அவரே காக்கிறார் அப்போது அவர் விஷ்ணு!

அவரே மறைக்கிறார் அப்போது அவர் மகேஸ்வரன்!

அவரே அருள்கிறார் அப்போது அவர் சதாசிவன்!

அவரே அழிக்கிறார் அப்போது அவரே ருத்திரன்!

ஆக ஏக இறைவனே எல்லாம் புரிகிறார்!

எல்லாமே அவன் செயலே!

அவனின்றி ஓர் அணுவும் அசையாது!

அணுவுக்கும் அணுவாக இருந்து எல்லாம் புரிந்து ஆள்வதும் அருள்வதும் அவன் திருவிளையாடல்களே! அற்புதங்களே!

அனுவுக்கு அனுவானவன், எல்லாம் ஆனவனே, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனே, அண்ட பகிரண்டமெங்கும் ஒளியாக ஒளிர்பவனே, நம் உயிராகவும் உள்ளான்!?

அணுவுக்கு அணுவாக ஒளிர்பவன் மனித உடலினுள் பலகோடி அணுத்துகள்கள் உள்ளத்தில் இல்லாமல் போவானா?! எங்கும் இருக்கும் இறைவன், தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் இருக்கிறான் “உயிராக”!!

இதுவே ஆதிகாலம் தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை! வேதங்களில் சொல்லப்பட்ட இறை இரகசியம்! “அகம் பிரம்மாஸ்மி”.

இறைவன் பரமாத்மா பரம்பொருள் பெரும்ஜோதி ஆண்டவன் தானே சிறுஜோதியாக தன்னை குறுக்கிக் கொண்டு ஜீவாத்மாவாக உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார்! நம் உள் மனம் கடந்த நிலையில் இருப்பதால் தான், உள்கடந்து இருப்பதால் தான் ஆன்றோர் கடவுள் என்றனர்!

கட உள்ளே கடத்தினுள்ளே, உன் உடலினுள்ளே என்றுதான் இதற்கு பொருள்! கடவுளே என்று உலகத்திலே தேடுபவன் காண்பது அரிது! கடவுளே என்று உடலிலே தேடுபவன் காண்பான் கண்களினாலேயே! வெளியிலே தேடுவது பக்தி! உடலுள்ளே தேடுவது ஞானம்!

இறைவன் கூப்பிடுதூரத்தில் உள்ளான் கைக்கெட்டின இடத்தில் இருக்கிறான் என்பர் பெரியோர்கள்! நம் உடலே இறைவன் வாழும் ஆலயம்! ஜீவர்களே நடமாடும் சிவம்!

கட உள்ளே

மனிதன்! உயிர் இருந்தால் தான்? இல்லையேல் பிணம்!

மனிதர்களாகிய நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம்! இல்லையேல் நாம் சவம்!

உயிர் இருந்தால் தான் வாழ்வு! உயிர் உடலைவிட்டு போய்விட்டால்? சாவுதான்!

உடலும் உயிரும் சேர்ந்திருந்தாலே பிரயோஜனம்! பிரிந்திருந்தால் இயக்கம் இல்லை! உடலோடு உயிர் இருந்தாலே இயக்கம்!

உடலைவிட உயிரே முக்கியமானது!

உயிர் உடலுடன் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன்.

இப்படி “தலை கால்” தெரியாமல் ஆடுபவனெல்லாம் அடிமுட்டாள்களே!

ஒருவன் எப்படி பிறக்கிறான்?

பிறப்பு என்றால் என்ன? ஏன் பிறக்கிறான்?

இதுதான் “தேவரகசியம்”. பிறப்பின் இரகசியம்.

ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறந்து விடுமா? நடக்காது!?

இன்றைக்கும் குழந்தையில்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்களே?

விஞ்ஞான வளர்ச்சி, டெஸ்ட்டியுப் குழந்தை உருவானது. ஆயிரம் பல்லாயிரம் முயற்சி செய்தால் ஒன்று உருவாகிறது! எல்லாம் ஜனிப்பதில்லை! எல்லோராலும் முடியாது!

விஞ்ஞானம் ஒரு வரையரைக்கு உட்பட்டதே! இன்றைய உலக வளர்ச்சி விஞ்ஞானத்தின் பரிமாணம் தான் மறுக்க முடியாது!

பஞ்சபூதங்களை அப்படி இப்படி, எதையாவது செய்து ஏதோதோ கண்டுபிடித்து சுகபோகமாக வாழ வழி கண்டனர் பலர்!

எல்லோரும் இந்த பூமியில் உள்ளவர்கள் தானே! இந்த பூமியில்தானே பிறந்தார்கள், இந்த பூமியில் தானே, எப்படியெப்படியோ வாழ்ந்து மடிந்தார்கள்.

இந்த மனிதர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? பூமியில் கொஞ்சகாலம் வாழ்ந்தார்கள்! எல்லோரும் – பெரும்பாலானவர்கள் இறந்துபோயினர்! இறந்து அவர்கள் போனது எங்கே!?

பிறந்தவர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? இறந்தவர்கள் எங்கு போனார்கள்? பிறந்தபோது வந்த உடல், இறந்தபோதும் இருக்கின்றதே?

அப்டியானால் பிறப்பு இறப்பு உடலுக்கு இல்லையே?! பின் எதற்கு? உயிர்கொண்டு உடல் வந்தாலே பிரயோஜனம்! உயிர் இன்றி உடல் இருந்தால் மண்தான்!.

உயிர்தான் பிரதானம்! உயிர்தான் பிறக்கிறது உடல் கொண்டு! உடலைவிட்டு உயிர் பிரிவதே மரணம்! பிறப்பும், இறப்பும் உயிர் வருவதும் போவதும் தான்!

நம்மை ஈன்ற தாய் நமக்கு கொடுத்தது உடல் மட்டுமே! அன்னையின் உடலில் உடலிலிருந்து மாதந்தோறும் வெளியேறும் உதிரமே, அன்னை தந்தையின் சுரோணித சுக்கில சேர்க்கையால் உருண்டு திரண்டு கருவாகி பிண்டம் உருவாகிறது!

தீட்டு என்கிறோமே – நம் உடலே தீட்டுதான்! நம் தாயின் தீட்டு தான் நாம்! மனிதன் மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளும் இப்படியே!

ஆணின் உயிர் சக்தி சுக்கிலம், பெண்ணின் உயிர் சக்தி சுரோணிதம் இரண்டும் சேர்ந்தால்தான் புதிய உயிர் தோன்றுவதற்கு அஸ்திவாரம்!

ஆணும் பெண்ணும், சிவமும் சக்தியும், பாஸிடிவ் நெகடிவ் சேர்ந்தாலே-இணைந்தாலே சக்தி பிறக்கும்-இயக்கம் ஆரம்பமாகும்!

தாயின் கருவிலே வயிற்றிலே உருவாகிறது பிண்டம், மூன்று மாதத்திற்கு பிறகு தான் உயிர் வருகிறது! இதுவே அற்புதம் கருவுக்கு உயிர் எப்படி வந்தது?

இங்கேதான் ஆரம்பிக்கிறது நமது மெய்ஞ்ஞானம்! தாயின் வயிற்றிலே குழந்தையின் உடல்தான் உருவாகிறது! உயிர் எல்லாம் வல்ல இறைவன் அருளால் வந்து சேர்க்கிறது!

இன்னாருக்கு இன்னார் வந்து பிறக்க வேண்டும் என்ற நியதி – விதி – கணக்கு எல்லாம் வல்லவன் வகுத்து வைத்தது! அவன் அருள் ஆக்ஞைபடியே உயிர் தாய் கருவிலே வருகிறது!

இதுவே தேவரகசியம்! எப்படி வருகிறது? யாரும் இதுவரை அறிந்திராத ஒன்று! இந்த காலத்தில் வருகிறது - வந்தது என்று அறியலாமே தவிர எப்படி வந்தது என அறிவார் இல்லை?!

“உயிர்” என்றால் என்ன? உயிர் எங்கிருந்தது? எப்படி உடலினுள் பிரவேசித்தது? உடலில் எங்கு இருக்கிறது? எந்த வடிவில் தன்மையில் இருக்கின்றது? இதையெல்லாம் அறிந்தவனே ஞானி!! அவனே சித்தன்!!

ஒரு சிசு தாயின் கருவிலே 10 மாதம் வளர்ந்து பூரணமாகிறது. ஒரு மாதம் என்பது 27 நாட்களே! 27 நட்சத்திரங்களே 1 மாதம். 10 மாதம் என்றால் 270 நாட்களே.

பிரசவ வலியே சிசுவின் பிரவேசத்திற்கு அறிகுறி! கன்னிக்குடத்திலே – குளத்திலே மிதந்து கொண்டு, ‘ஸ்டிரா” மூலம் குளிர்பானம் அருந்துவது போல, தொப்புள் கொடி மூலம் வேண்டிய உணவை தாயிடமிருந்து உறிஞ்சும் சிசு!

படைக்கும் பரமாத்மா உயிர்களை படைக்கும் ஆற்றல் இருக்கிறதே, அப்பப்பா அதிசயம்! அற்புதம்! எண்ணிப் பார்க்க இயலாத ஒப்பற்ற அதிஉன்னத செயலாகும்!

படைத்த பரமன் காக்க மாட்டானா? இறைவன் தான் நம்மை காப்பாற்றுகிறான்!! தாயின் கருவிலிருந்து எப்போதும் துணையாக இருந்து காப்பவன் இறைவன் மட்டுமே! கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் படியளப்பவன் காப்பவன் இறைவன் ஒருவனே!

நம்மை படைத்து காப்பவன் நம்மிடமிருந்து, நான் யார்? ஏன் பிறந்தேன்? எப்படி பிறந்தேன்? இதுபோன்ற எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமறியா குழந்தையாக்கி உலகில் விட்டுவிடுகிறான்! என்னே! அவனின் திருவிளையாடல்!

பிறப்பிக்க வைத்த அந்த இறைவனே எல்லா உயிர்களுக்கும் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிப்படுத்திக் காட்டு கின்றான்! ஆனால் அறிவோர் உணர்வோர் வெகுசிலரே! எல்லாம் வல்ல அந்த இறைவனே கருணையே உருவானவன்! அருங்கடல்! எல்லா உயிர்களும் தன்னை அடைய அருள்மழை பொழிகிறான்! மனிதனாக பிறக்கும் அனைவருக்கும் இறைவன் அருளும் அரிய சந்தர்ப்பம் இது!

மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும் எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர் வினைக்கு ஏற்ப வாழ்வை முடித்தும் வைக்கிறான்! அதாவது உடலை அழித்து அல்லது மாற்றி அவரவர் பரிபக்குவத்திற்குக்கேற்ற நிலையை தந்தருள்கிறார்!

எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே!
அவரே படைக்கிறார் அப்போது அவர் பிரம்மா!

அவரே காக்கிறார் அப்போது அவர் விஷ்ணு!

அவரே மறைக்கிறார் அப்போது அவர் மகேஸ்வரன்!

அவரே அருள்கிறார் அப்போது அவர் சதாசிவன்!

அவரே அழிக்கிறார் அப்போது அவரே ருத்திரன்!

ஆக ஏக இறைவனே எல்லாம் புரிகிறார்!

எல்லாமே அவன் செயலே!

அவனின்றி ஓர் அணுவும் அசையாது!

அணுவுக்கும் அணுவாக இருந்து எல்லாம் புரிந்து ஆள்வதும் அருள்வதும் அவன் திருவிளையாடல்களே! அற்புதங்களே!

அனுவுக்கு அனுவானவன், எல்லாம் ஆனவனே, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனே, அண்ட பகிரண்டமெங்கும் ஒளியாக ஒளிர்பவனே, நம் உயிராகவும் உள்ளான்!?

அணுவுக்கு அணுவாக ஒளிர்பவன் மனித உடலினுள் பலகோடி அணுத்துகள்கள் உள்ளத்தில் இல்லாமல் போவானா?! எங்கும் இருக்கும் இறைவன், தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் இருக்கிறான் “உயிராக”!!

இதுவே ஆதிகாலம் தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை! வேதங்களில் சொல்லப்பட்ட இறை இரகசியம்! “அகம் பிரம்மாஸ்மி”.

இறைவன் பரமாத்மா பரம்பொருள் பெரும்ஜோதி ஆண்டவன் தானே சிறுஜோதியாக தன்னை குறுக்கிக் கொண்டு ஜீவாத்மாவாக உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார்! நம் உள் மனம் கடந்த நிலையில் இருப்பதால் தான், உள்கடந்து இருப்பதால் தான் ஆன்றோர் கடவுள் என்றனர்!

கட உள்ளே கடத்தினுள்ளே, உன் உடலினுள்ளே என்றுதான் இதற்கு பொருள்! கடவுளே என்று உலகத்திலே தேடுபவன் காண்பது அரிது! கடவுளே என்று உடலிலே தேடுபவன் காண்பான் கண்களினாலேயே! வெளியிலே தேடுவது பக்தி! உடலுள்ளே தேடுவது ஞானம்!

இறைவன் கூப்பிடுதூரத்தில் உள்ளான் கைக்கெட்டின இடத்தில் இருக்கிறான் என்பர் பெரியோர்கள்! நம் உடலே இறைவன் வாழும் ஆலயம்! ஜீவர்களே நடமாடும் சிவம்!

Wednesday 20 March 2013

கண்திறந்து கண்மணி உணர்வோடு

கண் மூடி செய்யும் எந்த ஆன்மிக சாதனையும் தியானமோ , தவமோ ஆகாது.

கண்மூடிட்டான் என்று தமிழில் இறந்தவரையே கூறிப்பிடுவர்.
கண்மூடி பழக்கம் என்று தவறான பழக்கத்தை கூறிப்பர்.

கண்திறந்து கண்மணி உணர்வோடு கண் ஒளி கொண்டு உள் செல்வது தவம். இந்த உணர்வை தன கண் ஒளி கொண்டு கொடுப்பவர் தான் உண்மை சற்குரு. இதற்கு உதாரணங்கள்

அகத்தியர் கண் மூடி தவம் செய்பவரை மூடர்கள் என்று சாடுகிறார்.
http://tamil.vallalyaar.com/?p=2384
http://tamil.vallalyaar.com/?p=1800
http://tamil.vallalyaar.com/?p=1444

கண்முடி செய்யும் தியானத்தை திருமூலரும் சாடுகிறார் :

"குருடும் குருடும் சேர்ந்து குருடாட்டம் ஆடி குழியில் விழுந்தவாரே" - திருமந்திரம்.

கண் மோடி தியானம் செய்ய கற்றுகொடுபவர்களும் அதை நம்பி அவர் சொல்வதை செய்யும் சீடர்களும் குருடர்கள் என்றும் அவர்கள் கடைசியில் சேருமிடம் மரணகுழியே என்பது தான் இதன் அர்த்தம்.

மேலும் வள்ளலார் கண் மூடி பழக்கம் எல்லாம் மண் மூடி போக என்கிறார்.

அகத்தியரும், வள்ளலார், சித்தர்களும் சொல்வதை கேட்பீரா? அல்லது இன்றைய அரை வேற்காடு சாமியார்களை நம்புவீர்களா சிந்திபீர்!

Friday 15 March 2013

திருவடி தீட்சை என்றால் என்ன?

எட்டு (8), இரண்டு (2) எதை குறிக்கிறது?

நமது வலது கண் 8 என்றும், இடது கண் 2 ஆகவும் குறிப்பிடபடுகிறது.
வலது கண் – அ , இடது கண் – ௨
வலது கண் – சூரியன் , இடது கண் -சந்திரன்.
வலது கண் – சிவம் , இடது கண் – சக்தி
வலது கண் – சக்கரம் , இடது கண் – சங்கு

 திருவடி தீட்சை என்றால் என்ன? 










தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால் தூண்டுவதே தீட்சை.
தீட்சையின் மூலம் தன் கண்ணில் – கண் மணியில் உணர்வு பெறுகிறான் சீடன்.

நம் கண்மணியை கிருஷ்ண மணி என்பர். தகுந்த ஞான சற்குருவின் மூலம் நம் கிருஷ்ண மணியில் உணர்வு பெறுவதே கிருஷ்ண உணர்வு. இந்த உணர்வை பெறுவதே தீட்சை. இதை தான் சித்தர்கள் “தொடாமல் தொடுவது” , “உணர்வால் உணர வைப்பது” என்றனர்.

நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரிரம் தீட்சையின் மூலம் பிறக்கிறது. இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே தாய் தந்தை ஆகிறார்.
“அக்னியின் மூலம் ஞானஸ்தானம்” என்று பைபிள் இதையே கூறிப்பிடுகிறது. இயேசு நாதர் அக்னியால் வழங்கியே ஞானஸ்தானம் இதுவே.

தீட்சை பெற்றவனே துவிசன் ஆகிறான். துவிசன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று பொருள். இதையே பைபிள் “மறுபடி பிறவாதவன் பரலோக சம்ராட்சியத்தில் பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை” என்று கூறுவதும் இதையே.
மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.


தீட்சை பெற என்ன தகுதி வேண்டும்?

தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம். தீட்சை பெற முக்கிய தகுதி :
1 . சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
2 . போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே விடு நீங்க வேண்டும்.
3 . ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.
சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா பாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும்.இப்பழக்கங்கள் இருப்பின் உடனடியாக இவைகளை கைவிட்டு , இனி இவைகளை செய்வதில்லை என சங்கல்பம் செய்து கொண்டு பின் தீட்சை பெறலாம்.

தவம் செய்வது எப்படி?
தவம் என்றால் மந்திர ஜபம் அல்ல. தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்பதோ அல்ல. தவம் என்றால் பிரணாயாமமோ அல்ல. தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல.

கண்மூடி செய்யும் எந்த செயலும் தவம் ஆகாது. கண்களை திறந்து தான் “விழி திறந்து” தான் தவம் செய்ய வேண்டும்.

இறைவன் திருவடியில்(நம் கண்ணில்- கண் மணியில் – கண்மணி ஒளியில்) மனதினை நிறுத்துவதே தவமாகும். சும்மா இரு என்பதன் அர்த்தம் இதுவே. அதாவது நம் மனதை திருவடியில் வைத்து இருப்பதே. குரு தீட்சை பெற்று நம் கண்ணில் உணர்வு பெற்று அதை நினைத்து நினைத்து உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும்.

இங்நனம் தவம் தொடர்ந்தால் பலவித அனுபவங்கள் நாம் பெறலாம். நமது வள்ளல் பெருமான் ஞான சரியையில் கூறியபடி நாம் இவ்வாறு தவம் செய்தால் பெறலாம் நல்ல வரமே. நம் வினைகள் எல்லாம் எரிந்து விடும். பெறலாம் மரணமிலா பெருவாழ்வே. பிறவாப்பெருநிலை. அருட்பெரும் ஜோதி இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும் ஒளியாகி இணையலாம். பேரின்பம் பெறலாம்.

மெய்பொருள், திருவடி என்பது என்ன?

மெய்பொருள், திருவடி என்பது என்ன?
 
இறைவன் திருவடியை பற்றி பாடாத ஞானிகளே இல்லை.
“நின் திருவடியை மறவாத மனமே வேண்டும்” என்றும் எல்லா மகான்களும் ஆண்டவனை வேண்டினர்.

ஜோதி வடிவான இறைவனின் திருவடி எது? எங்கும் நிறைந்த இறைவன் நம் உயிருக்கு ஒளியாக – ஒளிக்கு ஒளியாய் உள்ளான்.

மேலும் நம் கண்களில் ஒளியாக துலங்குகிறான்.

நம்மை அறிய , இறைவனை உணர திருவடியையே பற்ற வேண்டும். நாம் இறைவனை தேடி அலைய கூடாது என்பதற்காக நம் கண்ணனுக்கு எட்டிய தூரத்திலே கண்ணிலே இறைவன் ஒளியாக துலங்குகிறான்.

இந்த ஜீவ ஒளியை தாங்குவதால் நம் கண்களே இறைவன் திருவடி. மெய்யான பொருளை கொண்டு உள்ளதால் கண்களே மெய்பொருள்.

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் -  Click Here
திருவருட்பாவில் வள்ளலார் – Click Here
திருமந்திரத்தில் திருமூலர் -  Click Here
திருக்குறளில் திருவள்ளுவர் – Click Here
சித்தர்கள் திருவடி - Click Here

நம் உடலில் உயிர் எங்கு உள்ளது?

நம் உடலில் உயிர் எங்கு உள்ளது?
 
“எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்”. நம் உயிர் நம் தலையின் நடுவில் அதாவது , நம் தலை உச்சிக்கு கீழ் நம் உண்ணாவுக்கு மேல் நம் இருகண்ணும் உள்ளே சேரும் இடத்தில் இருக்கிறது. அது துலங்குவது இரு கண்களில்.
நமது சிரசில் உச்சியில் இருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது. அது நமது கண் காது மூக்கு உள்ளே சேரும் மத்தியில், வாயில் உள் அண்ணாக்குவின் சற்று மேல் வந்து நிலைகொண்டு , அங்கிருந்து இரு நாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்கிறது. இவ்விடத்தை லல்லாடஸ்தானம் , ஆன்ம ஸ்தானம், பத்தாம் வாசல், கடை கண் என்று சித்தர்கள் கூறுவர்.
“உச்சிக்கு கீழ் உண்ணாவுக்கு மேல் அணையா விளக்கு நிதம் எரியுதடி” – சித்தர் பாடல்.”மையமர் கண்டன்” என்று மாணிக்கவாசகரும் தலையின் மத்தியில் உயிர் உள்ளதை கூறிப்பிடுகிறார்

ஞானம் என்றால் என்ன?

ஞானம் என்றால் என்ன? ஞானி என்போர் யார்?

பரிபூரண அறிவே ஞானம். பூரணம் என்றால் முழுமை. முற்றும் அறிந்தவனே – உணர்ந்தவனே பரிபூரணன். ஞானி.

சந்தேகமின்றி – தெளிந்தவனே எல்லாம் தெரிந்தவன் ஆவான். அவனே எல்லோருக்கும் தெரிவிப்பான். அவன் தான் ஞானி.

இரக்கமே உருவானவன். கருணையே வடிவானவன். எவ்வுயிரையும் தம்முயிர் என கருதுபவன். அவனே ஞானி.

எல்லாம் வல்ல , எங்கும் நிறைந்த ஆதியும் – அந்தமில்லா, கருணை மழையான , வள்ளலான இறைவனை அறிந்தவர்கள் – உணர்ந்தவர்கள் ஞானிகள் ஆவர்.

எல்லாம் வல்ல அந்த இறைவனின் அம்சமே தன் உயிர் என்றும் அந்த உயிர் ஒளியே கண்களில் ஒளியாக துலங்குகிறது என்பதை அறிந்து, உணர்த்து தெளிந்தவன் ஞானி ஆவான்.

வள்ளல் யார்? இறைவன் தான்? இவ்வுண்மையை அறிந்தவன் உணருகிறான். உணர்ந்தவன் ஞானி ஆகிறான். ஞானி ஆனவன் “தான் அதுவாகவே” மாறுகிறான். தான் ஆகிய ஆத்மா அதுவாகிய பரமாத்மாவின் இயல்பை பெற்று விடுகிறது.

Wednesday 27 February 2013

திருவடி உபதேசம்


திருவடி உபதேசம்

ஆன்ம நேய ஒருமைபாடுடையீர் வணக்கம். எல்லாம் வல்ல , கருணை கடலான திரு அருட்பிரகாச வள்ளலார் அருளினாலும் , ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அவர்கள் அருளினாலும் நாங்கள் திருவடி உபதேசம் என்ற இக் கட்டுரையை வெளியிடுகிறோம்.
இது நாள் வரை இவ்உபதேசம் குறிபிட்ட சில பேர்களுக்கு மட்டுமே தெருவிக்கபட்டுவந்தது. மேலும் இது இரகசியம் என்று முழுமை பெறாதவர்கள் மறைத்து வந்தனர். எல்லாம் வல்ல அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் கருணையாலும் , ஞானிகளின் ஆசியாலும் எங்கள் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அவர்கள் எல்லா இரகசியத்தையும் தனது புத்தகங்களின் மூலமாக, மெய்ஞான உரையாக பரசியம் ஆக்கி உள்ளார். உலக மக்களின் நன்மைக்காக அனைவரும் இறைவனின் அருளை பெற வேண்டி இங்கு நாங்கள் வெளியிடுகிறோம்.
இக்கட்டுரையை தயவு கூர்ந்து முழுமையாகவும் ஆழ்ந்து படிக்கவும் வேண்டுகிறோம்.
உபதேசம் என்றால் என்ன?
உபதேசம் என்ற வார்த்தை உப+தேசம் என்ற இரு வார்த்தைகளின் தொகுப்பு. “உப” என்றால் இரண்டு, தேசம் என்றால் இடம். உபதேசம் என்றால் இரண்டு இடம். இந்த இரண்டு இடம் என்ன?
திருவடி என்றால் என்ன?
எல்லா ஞானிகளும் இறைவனின் திருவடியை பற்றுங்கள் என்று பறைசாற்றுகின்றனர். திருவடியை மறவாத மனம் தா என்று ஆண்டவனை வேண்டுகின்றனர். நம் உடலில் குடி கொண்டுள்ள ஆண்டவன் ஜோதி சொரூபமான இறைவனின் திருவடி என்றால் என்ன? அவன் எங்கு தன் திருவடியை பதித்து உள்ளான்? அந்த திருவடியை எவ்வாறு பற்றுவது?
இதற்கான விடை தான் திருவடி உபதேசம் , அதாவது திருவடி நம் உடலில் உள்ள இடத்தை சுருதி , யுக்தி , வாக்கியம் கொண்டு விளக்கி தெளிய வைப்பது தான் திருவடி உபதேசம். திருவடியை அறிந்து உணர்ந்து தவம் செய்தால் தெய்வீக அனுபவங்கள் பெற்று நாம் நம்மை உணர்ந்து , நம் தலைவனான இறைவனை உணர்ந்து அடைய முடியும்.
நாம் யார்? உடலும், மனமும் மட்டும் தான் நாமா? எது இல்லாவிடின் இவ்வுடல் இயக்கம் செயல்படாமல் நிற்கிறது? எப்போது ஒருவர் இறந்து விட்டார் என்று கூறுகிறோம்? இறந்த உடன் எதோ ஒன்று இவ்வுடலை விட்டு பிரிகிறது அல்லவா! அந்த எதோ ஒன்று இவ்வுடலில் இருப்பதால் தானே நம் உடல், மனம் செயல்படுகிறது. அது என்ன? நமது ஞானிகள் இதை உயிர் என்றும் ஆன்மா என்றும் “ஜீவாத்மா” என்றும் கூறிபிடுகின்றனர். இவ்வுயிர் அழிவற்றது என்றும் நாம் யார் என்ற கேள்விக்கு “நாம் என்பது” நம் உடலில் தங்கியுள்ள உயிர் அதாவது ஜீவாத்மா தான் நான் என்று கூறிப்பிடுகின்றனர்.
இவ்வுயிரை அறிந்து , தெரிந்து, உணர்ந்தாலே நாம் யார் என்பதை தெளிவாக முற்றிலும் உணர முடியும். இவ்வுயிரை அறிய முதலில் இவ்வுயிர் நம் உடலில் எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கு இருக்கிறது என்று தெரிந்தால் தான் நாம் உடலில் அங்கு சென்று அதை உணர முடியும். நம் உயிர் உடலில் எங்கு இருக்க முடியும் என்பதை முதலில் நமது சிற்றறிவால் சிந்தனை செய்து அறிவோம்? அதன் பின் நம் அடைந்த முடிவை ஞானிகளின் பாடல்களின் மூலம் உறுதி செய்து கொள்வோம்.
உயிரின் தன்மை என்ன என்று தெரிந்து கொண்டு பின் அது எந்த இடத்தில் இருக்கும் என்று பார்போம். உயிரின் தன்மை அறிய இறந்த உடலுக்கும் உயிர் தங்கியுள்ள உடலுக்கும் உள்ள வித்தியாசத்தை கொண்டு பார்போம்.
எல்லா உயிர் உள்ள மனித உடலும் ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் உள்ளதை அறியலாம். இறந்த உடலில் இவ்வெப்பம் இல்லாமல் குளிர்ந்து போய் இருப்பதை நாம் பார்க்கலாம். அதனால் உயிரின் ஒரு தன்மை வெப்பம் (அ) ஜோதி என்று அறிந்து கொள்ளலாம். ஆன்மா ஜோதி மயமானது என்ற ஞானிகளின் கூற்றின்படி உயிரின் மற்றொரு தன்மை ஒளி என்பதை அறியலாம்.
இவ்விரு முக்கியமான தன்மையினை கொண்டு உயிர் இருக்ககூடிய இடத்தை ஆராய்வோம்.
முதல் படியாக ஒரு மனிதன் எந்த உறுப்பு இல்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை பார்போம்? கை, கால் இல்லாமல் உயிர் வாழ முடியும். நம் உடலில் இருதயம் கூட இல்லாமல் ஒரு கருவியின் உதவி கொண்டு நாம் உயிர் வாழ்கிறோம். இதனால் இவ்வுருப்புகளில் உயிர் இல்லை என நாம் முடிவு செய்து கொள்ளலாம்.
தலை இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது. தலையே உடலில் பிரதான உறுப்பாக இருக்கிறது. “எண் சான் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்பது சித்தர்கள் வாக்கியம். இதிலிருந்து உடலில் உயிர் தலையில் தான் இருக்கிறது – இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது அல்லவா?
நமது தலையில் எங்கு உயிர் இருக்க முடியும்? ஒரு சிறு உதாரணம் கொண்டு இதை ஆராய்வோம்.
நமது தலையினை ஒரு அறையாக பாவிப்போம். ஒரு விளக்கினை (ஒளி) ஏற்றி நடு அறையில் வைத்தால் தான் அவ்விளக்கின் ஒளி சமமாக எல்லா இடங்களுக்கும் பரவும். அது போலவே நமது உயிரானது சிரசின் நடுவில் அதாவது தலையின் உள் நடுவில் இருந்தால் தான் உயிர் ஆற்றல் தலையில் உள்ள ஐந்து உறுப்புகளுக்கும் சமமாக ஆற்றல் கொடுக்கும்.
அதனால் நமது சிந்தனையின் படி தலையின் நடுவில் தான் உயிர் இருக்க வேண்டும் என்று புலனாகிறது. நமது இந்த முடிவை ஞானிகளின் பாடல்களை கொண்டு சரியா என்று பார்போம்.
திருமூல நாயனார் தமிழ் மறையான திருமந்திரத்தில் அப்பட்டமாக இந்த ஞான இரகசியத்தை கூறியுள்ளார். நமது சிரசில் இருந்து உச்சியிலிருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது! அது நமது கண், காது, மூக்கு உள்ளே சேரும் மத்தியில் , வாயின் உள் அண்ணாகுவின் சற்று மேல் வந்து நிலை கொண்டு , அங்கிருந்து இருநாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்கிறது. இவ்விடமே சிரநடு.
மற்றுமொரு சித்தர் “உச்சிக்கு கீழ் அண்ணாவுக்கு மேல் அணையா விளக்கு நித்தம் எரியுதடி ஞான பெண்ணே” என்று உயிர் உள்ள இடத்தை சுட்டி காட்டுகிறார். இதன் மூலம் உயிர் உள்ள இடம் நமது தலை மத்தி என்று புலனாகிறது.
அடுத்தாக தலையின் நடுவில் உள்ள உயிரை எவ்வாறு சென்று அடைவது என்று பாப்போம். இது மிகவும் எளிது. நமது தலையில் உள்ள எந்த உறுப்பில் ஒளி துலங்குகிறது? கண் அல்லவா? ஆம் கண்ணே நமது ஜீவ ஒளியினை பிரதிபளிக்கிறது.
ஒளியாக உள்ள அந்த இறைவனின் அம்சமான உயிரை – ஒளியை கொண்டே தான் அடைய முடியும். அதனால் கண்களே நாம் நமக்குள் உட்புகும் வாசல். கண் ஒளியே இறைவன் திருவடி. மெய்யான ஒளியினை தாங்கி உள்ளதால் கண்ணே மெய்பொருள். இறைவன் திருவடியான கண்களை பிடித்தாலே நம்மை அறிந்து இறைவனை அறிய முடியும்.
கண்ணை பற்றி பாடாத ஞானிகளே இல்லை எனலாம். பரிபாசையாக , நேரடியாக, குறிப்பாக கண்ணையே ஞானிகள் , இறைவனை அடையும் வழி என்று கூறி உள்ளனர்.
கண்ணை பற்றி சொல்லியுள்ள சில ஞானிகளின் பாடல்களை பாப்போம்.
இயேசு கிறிஸ்து :
“தேவன் ஒளியாக உள்ளான், நீ ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம்”.
“கண்ணே சரிரத்தின் விளக்கு. உன் கண்கள் ஒளி மிகுந்ததாக இருந்தால் உன் உடல் ஒளி மிக்கதாக இருக்கும்”
- இதுதான் மூலம் நம் கண் ஒளியை பெருகி அந்த ஒளியில் உள் நடந்து தேவனை தரிசிக்க வேண்டும் என்று தெளிவாக கூறி விட்டார்.
திருநாவுக்கரசர் :
“காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான் காண்”
அபிராமி பட்டர்:
“மணியே , மணியின் ஒளியே, ஒளியின் உணர்வே, அணுகாதவர்க்கு பிணியே, பிணிக்கு மருந்தே” என்று கண்மணியில் ஒளியை நாம் பற்ற வேண்டும் என்று பாடியுள்ளார்.
வள்ளலார்:
“காணும் கண்களுக்கு காட்டும் ஒளியாய், காட்டும் ஒளிக்கு காட்டுவிக்கும் ஒளியாய் பூணும் திருவடிகள்“
திருவருட்பாவில் பல பாடல்களில் திருவடி கண்களே என்று இதை வெளிச்சமாக்கி காட்டி உள்ளார்.
திருவள்ளுவர்:
“பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் , மற்றவைகளில் நிலையாமை காணப்படும்”
கடவுள் வாழ்த்து பகுதியில் பத்து பாடல்களில் ஏழு பாடல்களில் அடி என்று குறிபிடுகிறார்.
கண்ணன் என்ற வார்த்தை குறிப்பது கண்ணில் உள்ளவன் அவன் என்பதே.
கிருஷ்ண மணி என்று நாம் நம் கண்மணியையே குறிப்பிடுகிறோம்.
கண்மணியில் , கிருஷ்ணமணியில் பெரும் உணர்வே கிருஷ்ண உணர்வு.
கடோபநிசத்தில் நசிகேதன், மனித தேகத்தில் இறைவன் இருக்கும் இடம் யாது என எமதர்மரஜனிடம் வினவ, அதற்கு எமன், இறைவன் கட்டை விரல் அளவான இடத்தில் புகை இல்லாத ஜோதியாக விளங்குகிறான் என்று பதில் கூறுகிறார். இதுவே ஆதாரம் இதற்கு.
நம் உடலில் கட்டைவிரல் அளவான இடம் என பரிபாசையாக கூறப்பட்டது நமது கண்ணையே. பேரொளியான அருட்பெரும் ஜோதியான இறைவன் புகையில்லாத ஜோதி. நம் கண்மணி உள் இருக்கும் சுயம் ஜோதி. எவ்வளவு பெரிய ஞான இரகசியம். இது தெரிந்தால் தானே தட்சிணாமூர்த்தி உணர்த்தியது போல கண்ணை திறந்து சும்மா இருந்து தவம் செய்ய முடியும்.
ஆதி குரு தட்சிணாமூர்தியும் மோன உபதேசமாக இதையே தெரிவிக்கிறார். சும்மா இரு என்று சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்து நாம் சும்மா இருக்க வேண்டிய இடம் – அதாவது நமது மனதை நிறுத்த வேண்டிய இடம் நம் கண்மணியிலே – கண் ஒளியிலே என்று உணர்த்தி உள்ளார்.
சித்தர் சிவவாக்கியர் :
“வலது கண் சூரியன் , இடது கண் சந்திரன்” என நேரடியாக குறிபிடுகிறார்.
பகவத் புராணத்தில் இறைவன் இருதயத்தின் உள் உள்ளார் என்று தெரிவிக்க பட்டு உள்ளது.
இருதயம் என்பது = இரு + உதயம். நமது இரு கண்களே சூரியன் , சந்திரன் உதயமாகும் இடம். ஆம் நமது உடலில் வலது கண் சூரியன் , இடது கண் சந்திரன்.நாம் கோவிலுக்கு சென்று ஆண்டவனுக்கு கற்பூரம் காட்டி நமது கண்களிலேதான் வைத்து கொள்கிறோம்.
8 , 2 ,
சூரியன் , சந்திரன்,
அ, உ,
சக்கரம், சங்கு என்று குறிபிட்டுள்ள அனைத்தும் வலது கண்ணையும், இடது
கண்ணையும் தான் குறிக்கும்.
நமது அடுத்த கேள்வி நம்மால் ஏன் ஆத்மா ஜோதியை நம் கண் ஒளியினை கொண்டு பார்க்க முடிவதில்லை என்பது தான்?
இதற்கான பதில் நாம் செய்த வினைகள் (அ) கர்மம் தான்.
“பற்றி தொடரும் இரு வினை அன்றி வேறு ஒன்றும் இல்லை பராபரமே” – தாயுமான சுவாமிகள்.
நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே அதாவது இறைவனின் அம்சமே நமது உயிர். இவ்வாறு இருப்பின் ஒருவர் செல்வந்தராகவும், மற்றொருவர் ஏழையாகவும், ஒருவர் ஆரோக்கியமாகவும் மற்றொருவர் ஊணமாகவும், நோய் வாய்ப்பட்டும் இருப்பது ஏன்? நம் பிறப்பை , இறப்பை நிர்ணயிப்பது எது?
இதற்கு விடை நாம் இப்பிறப்பிற்கு முன் பற்பல பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களே தான்.
அவரவர் செய்த செயல்களே புண்ணியம் என்றும் பாவம் என்றும் இரு வினைகளாகி அதற்குரிய பலன்களை அவரவரே அனுபவிக்க செய்கிறது. இதுவே இறை நியதி.
எத்தனையோ பிறவிகளாக நாம் செய்த நல்வினை, தீவினைகள் இப்படி மூட்டை மூடையாக இருக்கிறது. ஆனால் இறைவன் நம் மீது இரக்கம் கொண்டு, கருணை கொண்டு அவ்வளவு வினைகளையும் நம்மிடம் தராமல் நல்வினை தீவினை இரண்டிலும் கொஞ்சமாக எடுத்து நம் உயிரோடு இணைத்து பிரார்த்துவ கர்மத்துடன் விதிக்கப்பட்ட கர்மத்துடன் நம்மை மனிதனாக இப்பூவுலகில் பிறப்பிக்க செய்துள்ளார். பிறப்பின் ரகசியம் இது.
இப்பிரார்த்துவ வினைகள் போக மீதம் உள்ளது சஞ்சிதம் (சஞ்சித கர்மம்) எனப்படும்.
பிராரத்துவ வினைகளோடு பிறந்த மனிதன் புரியும் கர்மங்கள் ஆகாமியம் எனப்படும். பிராரத்துவம் – விதி-ஆகமியத்தொடு சேர்ந்து வினை கூடவோ குறையவோ , அதாவது புண்ணியம் செய்து நல்வினை கூடலாம், அல்லது பாவம் செய்து தீவினை கூடலாம். இப்படி எதாவது செய்து எதையாவது பெற்று அந்த வினைகளோடு மரிக்கிறான்.
ஒவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினை பயன்கள் மட்டுமே.
நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சூட்சுமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது.
வள்ளலார் கண்ணாடி கூண்டின் உள் விளக்கினை ஏற்றி வைத்ததன் பொருள் இதுவே. இவ்வினைக்கு தகுந்தபடியே நம் மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு, சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது இவ்வினைகள் தான். இவ்வினைகள் கண்ணாடி போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது. கண் இல்லாதவர்களுக்கு இவ்வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை சக்தி அவர்களுக்கு இல்லை.
இவ்வினை திரையினை அகற்றுவது எப்படி?
இறைவன் திருவடியான நம் கண்ணை – கண்மணியின் ஒளியை பற்றியே.
எவ்வாறு இறைவன் திருவடியை பற்றுவது (அ) பிடிப்பது?
ஒரு தகுந்த ஞான சற்குருவின் மூலம் தீட்சை பெற்று தான்.
ஏன் குரு வேண்டும்?
“மாதா, பிதா, குரு தெய்வம்”.
ஒருவருக்கு தாயும் , தந்தையும் இயற்கையாக கிடைத்து விடுகிறது.
தாய் தந்தை பெற்ற நாம் ஒரு குருவை அடைந்து உபதேசம் , தீட்சை பெற்று தவம் செய்தே இறைவனை அடைய வேண்டும். இதுவே இறை விதி.
குருவின் முக்கியதுவத்தை உணர்த்தவே அவதாரங்களான ஸ்ரீ ராமரும் , கிருஷ்ணரும் குருவை தேடி சென்று நல்ல சீடர்களாக இருந்தார்கள்.
இயேசு நாதர் யோவானிடம் ஞானஸ்தானம் பெற்றார்.
அருணகிரிநாதருக்கு முருக பெருமானே குருவாக வந்தார்.
வள்ளலார், மாணிக்கவாசகர் போன்ற பிறவி ஞானிகளுக்கு இறைவனே குருவாக வந்தார்.
குருவின் முக்கியத்துவத்தை உணர்த்த சிவபெருமானே “ஆதி குரு தக்ஷினாமூர்த்தியாய் “ சனகாதி முனிவர்களுக்கு அருளினார்.
இங்கு நன்றாக கவனியுங்கள் யாருக்கும் இறைவன் நேரடியாக அருளவில்லை , முதலில் தானே குருவாகி தன்னை அடைய வழி கட்டினான். நம் அனைவர்க்கும் இது பொருந்தும்.
நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நமது சுற்றம், தாய் தந்தையர், நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் இயற்கை நமக்கு பல விஷயங்களை கற்று கொடுத்துள்ளது. இவைகளை எல்லாம் நமக்கு உலகியல் விஷயங்களை மட்டும் தான் கற்று கொடுத்துள்ளது. இவைகள் எல்லாம் ஆண்டவனிடம் நம்மை அழைத்து செல்லாது.
யார் ஒருவர் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கிறரோ அவரே ஒருவருக்கு குரு ஆவார். நம் உடலில் உள்ள “சத்”யத்தை (உயிர் – இறை அம்சம் ) பற்றி சுருதி, யுக்தி மற்றும் வாக்கியத்தால் புரிய வைத்து அந்த இறைவன் துலங்கும் இடத்தை (கண்களை) கூறுகிறாரோ அவரே சத்குரு. இந்த சத்யத்தை உணர நம் கண்களுக்கு உணர்வு கொடுத்து(தீக்ஷை) , தவம் செய்ய வழி காட்டுபவரே ஞான சற்குரு. இப்படி பட்ட ஞான சற்குருவை பெற்றவனே பாக்கியவான். அவனே தவம் செய்து இறை அருள் பெறுவான்.

“குருவில்லா விதை பாழ்”
“குருவின் அடி பணிந்து கூடுவார் அல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்”
“தகுந்த ஞான ஆசிரியன் கொண்டு உங்கள் நடு கண் புருவ பூட்டை திறந்து கொள்வது நலம்.”
“குரு பிரம்மா , குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வரா, குரு சட்சாத் பர பிரம்மா”
- குருவின் பெருமையை இவைகள் உணர்த்தும்
மனு முறை கண்ட வாசகத்தில் பெரிய குற்றமாக வள்ளலார் இதனையும் வலியுறுத்தி கூறுகிறார்
“குருவை வணங்க கூசி நின்றேனோ”
“குருவுக்கு காணிக்கை கொடுக்க மறந்தேனோ”
நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரிரம் தீட்சையின் மூலம் பிறக்கிறது. குரு தனது கண் ஒளியின் மூலம் நமது கண் ஒளியை தூண்டி , கண்மணிக்கு உணர்வு கொடுத்து சூட்சும சாரிரத்தை பிறக்க செய்கிறார். இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே தாய் தந்தை ஆகிறார்.
“அக்னியின் மூலம் ஞானஸ்தானம்” என்று பைபிள் இதையே கூறிப்பிடுகிறது. இயேசு நாதர் அக்னியால் வழங்கியே ஞானஸ்தானம் இதுவே.
தீட்சை பெற்றவனே துவிஜன் ஆகிறான். துவிஜன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று பொருள். இதையே பைபிள் “மறுபடி பிறவாதவன் பரலோக சாம்ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை” என்று கூறுவதும் இதையே.
மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.
ஞான சரியையில் வள்ளல் பெருமான் கூறும் தவம் இதுவே “நினைந்து நினைந்து – நம் கண்மணியை நினைந்து நினைந்து , உணர்ந்து உணர்ந்து – கண்மணியில் தீட்சையின் மூலம் பெறப்பட்ட உணர்வை உணர்ந்து, இதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் நெகிழ்ந்து அதனால் வரும் கண்ணீரில் நனைந்து” என்று தவம் செய்யும் முறையை ஞான சரியையாக வள்ளல் பெருமான் குறிபிடுகிறார்.
தீட்சையின் மூலமே வள்ளல் பெருமான் நம்முள் வந்து நம்மை வழி நடத்துகிறார்.
தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம். தீட்சை பெற முக்கிய தகுதி :
1 . சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
2 . போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே விடு நீங்க வேண்டும்.
3 . ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.
சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா பாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும்.
இவைகள் இருப்பின் இனி இவைகள் செய்வதில்லை என சங்கல்பம் செய்து இனி மேல் இவைகளை தவிர்த்து பின் தீட்சை பெறலாம்.
நாம் தகுந்த சற்குருவிடம் தீட்சை பெற்று தவம் செய்தால் தான் கண்களில் ஒளி பெருகி வினை திரைகள் அழிந்து நமது ஆன்ம தரிசனம் நமக்கு கிட்டும். நாம் நம்மை அறியலாம். நம்மை அறிந்து அந்த பரமனை அறிந்து உணரலாம். பேரின்பம் பெறலாம். மரணமில்லா பெரு வாழ்வு பெற்று சிரஞ்சீவியாக வாழலாம். கன்னியாகுமரியில் எங்கள் குருநாதர் இந்த திருவடி தீட்சையை வள்ளல் பெருமான் அருளால் வழங்குகிறார்.
தீட்சை பெற்று தவம் செய்ய வாரீர் கன்னியாகுமரிக்கு.
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
கொல்ல நோன்பு குவளையமெல்லாம் வோ ஒங்குக
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.

Saturday 16 February 2013

தவம் - சும்மா இரு!



மெய்ஞான சற்குரு வழியாக தெளிவு பெற உபதேசமும் அனுபவம் பெற தீட்சையும் பெற்று இந்த சாகாகல்வியை ஞானதானம் பெற்று தவம் செய்ய வேண்டும்.! சுருதி – யுக்தி - அனுபவம் இம்மூன்றுமே பூரண நிலையை கூட்டுவிக்கும்! ஞான தானம் பெற்று அதாவது தீட்சை பெற்று ஞான நூற்கள் படித்து யுக்தியினால் தெளிந்து தவம் செய்து அனுபவங்கள் பெற வேண்டும். தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றல் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமாமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! உடலை வருத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.

தவம் என்றால் நான் யார் ? என அறிய உணர மெய்ஞான சற்குருவிடம் ஞான தானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே! இறைவன் எங்கு உள்ளான், எழு திரைகள் எங்கு உள்ளது, சத்தியஞான சபை என்பதை சாகாக்கல்வி புத்தகத்தில் பக்கம் 54 படிக்கவும் குரு தீட்சை பெற்று கண்ணில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும் அருவியென ! கண் திறந்து தான் தவம் செய்யவேண்டும். இங்ஙனம் தவம் தொடர்ந்தால் பல வித அனுபவங்கள் நாம் பெறலாம்! நமது வள்ளல் பெருமான் ஞான சரியை யில் கூறியபடி நாம் இங்ஙனம் தவம் செய்து வந்தால் பெறலாம் நல்ல வரமே! மரணமில பெருவாழ்வே! பிறவா பெருநிலை. அருட்பெரும் ஜோதி இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும் ஒளியாக இணையலாம்! பேரின்பம் பெறலாம்! “என் இரு கண்காள் உமது பெருந்தவம் எப்புவனத்தில் யார் தான் செய்வார்?” - திருஅருட்பா 2770 வள்ளலார் தன் இருகண் களாலாலும் செய்த பெருந்தவத்தை தானே வியந்து போற்றுகிறார்! என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம் என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்.வள்ளல் பெருமான் கண்மணி பற்றி பாடிய பாடல்கள் பல உள்ளன.

இதுவே தவம்! இதனால் கிட்டுவதே ஞானம். ஞானம் தன்னை உணர்தலே.  தவம் செய்ய நாம் காட்டுக்கு போகவேண்டியது இல்லை! குடும்பத்தை விட்டு ஓடவேண்டியது இல்லை. காவி உடுத்தி தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியது இல்லை. நமது  உடலை வெறுத்து வருத்தாது துன்புறுத்தாது இருக்கவேண்டும். உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்.கடுமையான  ஜப தபங்கள் வேண்டாம். சுருக்கமாக சொன்னால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற தடை அல்ல! இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். தவத்தை (குருவிடம் தீக்ஷை பெற்றபின்) விடாது தொடர்ந்து 30 நிமிடமோ ஒரு மணி நேரமோ செய்தால் போதுமானது.  நீதி நேர்மை ஒழுக்கமே உங்கள் தவத்தை சிறப்பிக்கும் !  வேஷம் போடாதீர்கள்! எந்த தீய பழக்கங்களும் இல்லாது பார்த்து  கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்குள் இருகிறானல்லவா? வெளியே கோவிலில், குலங்களில் மலைகளில் தேடாதீர். தவம் செய்வோர் சுத்த சைவ உணவையே உண்ணவேண்டும். ஆத்மா சாதகன் பட்டினி கிடக்கக்கூடாது, சிரிதளதாவது உண்ணவேண்டும். தவம் சித்திக்க வேண்டும் இறைவனோடு ஐக்கியம் ஆக வேண்டும் என்று நான் யார் என்பதை  உணர வேண்டும் என்ற ஆன்ம பசியோடு நாம் இருக்க வேண்டும். புராணங்கள் கதைகளில் ரிஷிகள் செய்யும் பலவித தவங்களை கேள்வி பட்டு இருக்கிறோம்.இதை எல்லாம் பார்த்து பல மக்களுக்கு அவநம்பிக்கை பிறந்தது! அடடா இந்த மாதிரியெல்லாம் தவம் செய்ய முடியாது ,  இன்னொரு ஜென்மம் எடுத்து தான் வர வேண்டும் என அலுத்து கொள்வார்கள். இன்றும் இவ்வாறே பலர் உள்ளனர்.

உலக மக்களே அவநம்பிக்கை வேண்டாம்! உலகை உய்விக்க மெய்ஞானிகள் பலர் தோன்றி உள்ளனர். ஞான நூற்கள் பல தந்துள்ளார்கள். கவலை  வேண்டாம். காலம் செய்த கோலம் ஞானம் பலகாலமாக மறைக்கப்பட்டு விட்டது? காரியவாதிகள் சூழ்ச்சி!   ஞான சூரியன் திருவருட் பிரகாசவள்ளலார் பிறந்தார்! மடைமை என்னும் காரிருள் , அஞ்ஞானம் மக்களை விட்டு விலக கடைவிரித்தார்.!! கடைக்கண் காட்டினார் வள்ளலார்! ஞானம் துலங்க ஆரம்பித்தது. துளிர் விட ஆரம்பித்தது. வந்தார்! சொன்னார்! செய்தார்! வென்றார்! பெற்றார் ஒளி உடலை!!!!!  தான் பெற்ற மரணமிலா பெருவாழ்வை சாகாகல்வியை எல்லாருக்கும் பறை சாற்றினார்!!பயிற்றுவித்தார்! இன்றும் அடியேன் மூலம் பயிற்றுவித்து இருக்கிறார்.  ஞான பாதை தான் மிக எளிதானது.  ஞானதானம் செய்து அதனால் கிட்டும் புண்ணியம் பலன் மேலோங்கி தவம் சித்தித்து ஞானம் பெற்று பேரின்பம் பெருக! தானமும் தவமுமே ஞானம்  பெற ஒரே வழி! ஞான தானமே ஞான சாதனையே நம்மை நம்மை இறைவனிடம் சேர்க்கும்.

நம்முள் ஜோதி தரிசனம் கிட்டும்!


எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுனை அளவு நெருப்பாக இருக்கிறான்!! நம் உடம்பில் உட்புகு வாசலாகிய இரு கண்மணியில் ஞான குருவால்  தீட்சை பெற்று

கண்மணியில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து உணர்ந்து  உணர்ந்து தியானம் செய்ய வேண்டும்!!  தொடர்ந்து முயற்சி செய்யச் செய்ய நெகிழ்ச்சி ஏற்பட்டு கண்களில்  நீர் ஆறாக பெருகி பாயும். இப்படியே சாதனை தொடரவேண்டும்!! அப்போது கண்மணியின் உள் உள்ள சிறுஜோதி கொஞ்சங் கொஞ்சமாக பெருகும்! கண்மணியின் சுழற்சி கூடுவாதால் இது நடக்கும்!!  மனம் அங்கே நிற்பதால் கை கூடும்!! இரு கண்மணி வழி பெருகும் ஜோதி உள்புகுந்து சேர்ந்து அக்னி கலையுடன் போய் சேரும், அந்த இடம் நம் தலை உச்சிக்கு கீழ் , வாய் அண்ணாவுக்கு மேல் உள்ள இடமே!!

"விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் ருறுக்கியொ  ரோப்பிலா   ஆனந்தக்
கண்ணின்று காட்டி களிம்பறுத்  தானே " - திருமந்திரம்

சனாதன தர்மத்திற்கு விளக்கம் இந்த ஒரு பாடலே போதும்!! நம் கண்மணியில், வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் ஆகிய கண்மணிகளிலும் தியானம் செய்வதால் பெருகும் ஒளி உட்புகுந்து அக்னி கலையில் சேரும் - அதுவே முச்சுடரும் ஒன்றான நிலை ! ஜோதி பாதம்! திருவடி!! இந்நிலைபெறும் முயற்சியிலிருக்கும் சாதகனுக்கு படி படியாக  உச்சியில் இருந்து உள்ளங்கால் வாரை உள்ள 72000  நாடி நரம்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி பரவும். உடல் தூய்மையடையும்! நோய் நொடி வராது! உடல் உறுதி பெறும்! உள்ளம் பண்பாடும்! இறைஅருள் கிட்டும் ! எல்லா ஞானிகளின் ஆசிர்வாதமும் பெறுவான்! ஜோதி தரிசனம் கிட்டும்!  திரை விலகும் ஆன்மா பிரகாசிக்கும்! அங்கிருந்து ஜோதி ஊர்த்துவமுகமாக மேல் எழுந்து உச்சியை சகஸ்ராரத்தை அடையும்! உச்சியை அடைந்தால் அறிவுப்பிரகாசம்! பரவெளி காணலாம்! வெட்ட வெளியில் உலாவலாம் ! பேரின்பம்! பேரின்பம்! பேரின்பமே!

யார் குரு?



சொல்பவன் குரு! கேட்பவன் சீடன் ! தெரியாததை தெரிவிப்பவன் குரு!  தெரிந்து தெளிந்து கொள்பவனே சீடன்!  நாம் பிறந்ததில் இருந்து வாழ்நாள் முழுவதும் கற்று கொண்டே தான்  இருகிறோம்.  கல்வி கடவுள் சரஸ்வதி தேவியே! இன்னும் கற்று கொண்டு இருக்கிறாளாம். கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என ஞான கிழவி அவ்வை கூறுகிறாள்!  ஒவ்வொரு விசயத்தையும் ஒவ்வொருவரிடம் இருந்து கற்கிறோம். எல்லாரும் குருவே ! இயற்கையில் இருந்து மற்ற ஜீவராசிகளிடம் இருந்து எவ்வளவோ கற்று கொள்கிறோம்!   எல்லாமே குரு தான்!  அப்படியானால் குரு என தனித்து சொல்ல என்ன  காரணம்? எல்லாரும், எல்லாமும் பல விசயங்களை நமக்கு அறிவிக்கின்றனர் அவ்வளவுதான்!  எல்லாவற்றுக்கும் வாழ்க்கையை நெறிபடுத்த அறிவிப்பதே வேலை. இது குருவல்ல! யார் நம் அறிவை தூண்டி, நாம் யார்? என அறிய வழிகாட்டி, விழியின் உணர்வை  ஊட்டுகிறரோ அவரே குரு!  ஒப்பற்ற குரு ! சத்குரு ! ஞான குரு! நாம் யார் என ஒருவன் உணர வழி காட்டும் அந்த  ஒப்பற்ற குருவை! பெற்றாலே ஒருவன் வாழ்க்கை கடை தேற முடியும் ! உலக வாழ்வில் சிறப்பாக நோயின்றி  வாழ்வாங்கு வாழ்ந்து இனி பிறவாமல் இருக்க யார் வழி சொல்கிறாரோ அவரே சத்குரு! அறியாமையில் உழலும் மனிதன் சிந்தனையை தூண்டிம பிறப்பறுக்க, விழியால்  உணர்வூட்டி முன்னேற்றுபவரே ஞானகுரு!  ஒப்பற்ற குருவே சத்குரு! சத்குருவே ஞான குரு! நாமும் பெற்றால் தான் தப்பித்தோம்!  இல்லையேல் மீண்டும் மீண்டும் பிறவி பிணி தான்! மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வளர, வளர தான் ஒவ்வொன்றாக அறிந்து கொள்கிறான்! எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! பின் அவன் நல்லவன் ஆவதும் கேட்டவன் ஆவதும் அன்னை வளர்க்கையிலே!  சூழ்நிலையிலே !  எந்தவொரு சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தாலும் எல்லோரும் இறைவன் தன்னை   உணரும் சந்தர்ப்பத்தை அருள்கிறார்!! அவரவர் கர்ம வினைப்படி எல்லாம் நடந்தாலும் எல்லாருக்கும் இறைவன் அருள் புரிந்து ஞானம் பெற உதவுகிறார்!  இதில் பெரும்பங்கு ஞானிகளை சேரும்! இறைநிலை பெற்ற சாகவரம் பெற்ற ஞானிகள் இயல்பே அதுதான்! ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனை   உணரவேண்டும் என்பதற்காக கர்மவினையால் துன்புறும் நிலை மாற்றி வழிகாட்டி கூடவே இருந்து காத்து அருள்கிறார்கள். நாம் யாரையும் அறிந்திருக்க வேண்டியது இல்லை! நம்மை அவர்கள் அறிவார்கள்! ஞானிகளுக்கு சாதி மதம் இனம் மொழி நாடு ஒன்றும் கிடையாது ! யாதும் ஊரே யாவரும் கேளீர்!  இதுவே அவர்கள் நிலை!  "என் கடன் பணி செய்து கிடப்பதே" எந்த வித பேதமும் இன்றி எல்லோருக்கும் வலிந்து வந்து உதவி, காத்து அருள்பவர்கள் தான் ஞானிகள்! எண்ணில்லா சித்தர் ஞானிகள் தோன்றியது நம் நாட்டிலே! இங்கு பிறந்த நாம் அதற்க்கு பெருமை படவேண்டும்!  கடந்த  நூற்றாண்டில் தமிழகத்தில் அவதரித்து, மரணமில்ல பெருவாழ்வு பெற்ற உன்னதமான பேரின்ப நிலை அடைந்தவர் திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்!

        இராமலிங்க சுவாமிகளை சத்குருவாக கொண்டு தான் அடியேன் வாழ்கிறேன் !  இராமலிங்க சுவாமிகள் உரைத்த திருவடி ஞானத்தை தான் என்குரு ஜோதி இராமசாமி தேசிகர் எமக்கு உபதேசித்தார், தீட்சை வழங்கினார்!  கடந்த இருபத்தைந்து ஆண்டாக சாதனை செய்து இராமலிங்க சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்டு கண்ணியானனேன் ! எமக்கு இராமலிங்க சுவாமிகள் சுட்டிகாட்டி உணர்த்திய ஞான சித்தர் திருச்சி ஜோதி இராமசாமி தேசிகர் அவர்கள் சமாதி கொள்ளுமுன் அடியேனை அழைத்து குரு பீடத்தை அளித்தார்கள்!  அடியேனை பக்குவபடுத்தி முதல் 12  ஆண்டு முடிவில் "கண்மணிமாலை" எழுதி வெளியிட வைத்தார்கள்! அடுத்த 12  ஆண்டிற்குள் என்னை குரு பீடத்தில் இருத்திவிட்டார் வள்ளலார். அடியேனை குருவாக இருத்தி உள்ளிருந்து தீட்சை வழங்குவதும் அவர்களே அடியேன் செய்த புண்ணியம்! ஞானவான்களின் அருள் கிட்டி இன்று ஞான குருவாக இருக்கிறேன்! அவர்கள் இட்ட பணியை செவ்வனே செய்கிறேன்! செம்மையாக செய்துவைப்பதும் அவர்களே! உலகோரே வாருங்கள் !  உபதேசம் பெறுங்கள் ! தீட்சை பெறுவது அவசியம்!  அரிதான இப்பிறவி ஆண்டவனை அறியவே! காலம் தாழ்த்தாதீர்! கண் திறக்க வாருங்கள்! குரு யார் என தேர்ந்தெடுப்பதில் பலருக்கு குழப்பம்.  தன் சாதியில் ஒரு சாமியாரை போற்றுகிறது ஒரு கூட்டம்.தன் மதத்தில் உள்ள சாமியாரை கொண்டாடுகிறது மற்றொரு கூட்டம், தன் மொழி பேசும் ஒருவனை பாராட்டுகிறது இன்னொரு கூட்டம் . அரபியில் சொன்னாலும், ஹீப்ருவில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் சமஸ்கிரதத்தில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் எல்லாராலும் சொல்ல பட்டது  இறைவனை பற்றி மட்டுமே! உலகுக்கு ஆதி குரு முதல் குரு தட்சிணமூர்த்தி தான் ! இதுவே உண்மை !அதன்பின் தந்தைக்கே உபதேசித்தான் தனயன் ! அகத்தியருக்கும் அருணகிரிக்கும் உபதேசித்தான் ! இந்த வழி வந்த, வாழையடி வாழைஎன வந்தவர் தான் வள்ளல் இராமலிங்க சுவாமிகள் ! இவர்கள் உள்இருந்து உணர்த்த அடியேன் உபதேசம் தீட்சை வழங்குகிறேன். "நான் யார் "  எனவும் அறிவை தந்து, உணர்த்தி நம்மை வழி நடத்துபவரே உண்மை குரு!

வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம்  -  வேறோருவர்க்கும் எட்டாத புட்பம்   - இனி முடிந்து கட்டாத லிங்கம் கருத்தினுள்ளே
முட்டாத பூசை இறையாத தீர்த்தம் ! இதை சொன்ன தெரிந்தவனே இறைவனை உணர்த்த தகுதியானவன்  ரகசியம் என இருப்பதை தெளிவு படுத்தி உணரவைப்பவனே குரு! புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. வருக பலன்  - ஆன்மலாபம்!  குருவாக இருந்து ஞானிகளின் அருளால் தீட்சை வழங்கி வருகிறேன், வாருங்கள்.

தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே! - திருமந்திரம்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி                                                                                                                                                                        தனிபெரும்கருணை
அருட்பெருஞ்சோதி


கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக!!



"கலையுரைத்த கற்பனையை நிலைஎனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற"

கலை - ஒளிக்கலை! கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வர் ஞானம்  பெறார்! ஏன்?  கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்பவர்களுக்கு மாயை கலையாக ஒளியாக வெளிப்பட்டு மனம் மயங்கும்படியாக பலபல காட்சிகளை காட்டும். உடனே ஆஹா எனக்குப் பல அற்புத காட்சிகள் காண கிடைக்கின்றது. நானே ஞானம் பெற்றவன் நானே பெரியவன் என , ஏமாந்து, இறுமாந்து, பிதற்றுவான்!! கண்ணை மூடி தியானம் செய்பவன் நிச்சயம் ஏமாந்து போவான்!  மாயை அற்ப காட்சிகளையும் அற்ப சித்திகளையும் அருளும்! அந்தச் சிறு சிறு ஒளியை கண்டு கண்மூடி தவம் செய்பவன் மனம் மயங்கி தான் எல்லாம் அடைந்து விட்டதாக கருதி பல்லிளித்து இறுமாந்து ஆணவம் மிகுந்து கெட்டுவிடுவான்! அதனால் தான் வள்ளல் பெருமான் கலையுரைத்த கற்பனையே உயர் நிலை என கொண்டாடும் கண் மூடி வழக்கமெலாம் மண்மூடி போகட்டும் போகட்டும் என்று கூறுகிறார்! கண்ட கண்ட வழிமுறைகளை பின்பற்றி மக்கள் கண்மூடித்தனமாக செயல்பட்டு இறந்து போகின்றார்களே  என்ற வேதனையால் தான் வள்ளல் பெருமான் இதைக்கூறினார்!   இறைவன் நிலை, நம் நிலையை தெளிவாக உறுதியாக இதுதான் என அறுதியிட்டு  கூறுவதே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் வழங்கும் திருவடி உபதேசமாகும்! இப்படி திருவடி உபதேசம் வழங்கும் சன்மார்கமே சிறந்த ஒப்பற்ற ஞான மார்க்கத்தை உலகுக்கு வழங்குகிறது !  திருவடி உபதேசம் பெற்றவர் மெய்யுணர்வு பெற திருவடி தீட்சை பெற கன்னியாகுமரி தங்க ஜோதி ஞான சபைக்கு வருக! உங்கள் நடுக்கண்ணை திறந்து ஞானம்பெற வழிகாட்டுவார் வள்ளலார்! கண்ணை திறந்து தான் தவம் செய்ய வேண்டும்!   கண்ணை திறந்தால்தானே, நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து  தவம் செய்தால் தானே கண்ணீர் பெருக்கெடுத்து நம் உடலும் நனையும். ஆகவே மெய்யுணர்வு பெற்று கண்ணை திறந்து இருந்துதான்  சும்மா இருந்துதான் தவம் செய்ய வேண்டும்!! இது ஒன்று தான் ஞான வழி. கண்ணை மூடி செய்யும் எந்த பயிற்சியும் தியானமும் ஞானத்தை தராது?!  உங்கள் அகக்கண்ணை ஞான சற்குரு திறந்து திருவடி தீட்சை தருவார்! உங்கள் அறிவுக்கண் திறக்கும்! மனக்கண் திறக்கும்! ஞானக்கண் பெறுவீர்கள்! ஊனக்கண்ணால் விழித்திருந்து பார்த்து உணர்ந்து, இறைவனை அடைய வேண்டும் அடைந்த தீர்வது என்ற ஆன்ம பசியோடு சும்மா இருந்து மனதில் எண்ணமே தோன்றாத படி மனதையே திருவடியில் ஒப்படைத்து தனித்திருந்து தவம் செய்பவனே கண்ணை திறந்து இருந்து தவம் செய்பவனே ஞானம் பெறுவான்!  பதவி - முக்தி - மோட்சம்  கிட்டும்!

தன்னை உணர்வது எப்படி?

வினை கழித்து   தன்னை உணர்வது எப்படி?

  "வெவ்வினைக்  கீடான காயம் இது மாயம்" நாம் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு தகுந்தபடி நமக்கு உடல் தந்து இறைவன் நம்மை படைத்து அனுப்பினார் உலகத்தில்! இந்த உடல் வினைக்கு தக்கபடி செயல்படுவதால் அனைத்தும் மாயையே! வினைப்பயனே! இப்படியே போனால் அழிந்து விடும் உடல்! அழித்து விடுவர் உடலை! சுட்டோ! இட்டோ! அழியுடம்பை அழியாமை ஆக்கும் வகையே, கண்மணி ஒளியை கண்டு உணர்ந்து தவம் செய்வதாகும்! ஒப்பற்ற மேலான இந்த தவம் சும்மா இருப்பதேயாகும்! "வினை போகமே ஒரு தேகங்கண்டாய்" என ஞானி ஒருவர் கூற்றும் இப்பொருளே! தேகம் அழியாமலிருக்க வேண்டுமானால் வினை இல்லாமலாக வேண்டும்!

அதற்க்கு தான் ஞான சாதனை!- தவம்!- சும்மா இருக்கவேண்டும்! கண்மணி ஒளியை குருவிடம் தீட்சை பெற்று உணர்ந்து தவம் செய்யச்செய்ய ஒளிபெருகி சூட்சுமம் நிலையிலிருக்கும் வினையாகிய திரை உருகி கரைந்து விடும்! வினை தீரத்தீர  ஒளி மிஞ்சும்! மிஞ்சுகின்ற ஒளி உடல் முழுவதும் பரவும்! ஊன  உடலே ஒளி உடல் ஆகும்! பிறவி கிடையாது! வினை இல்லையெனில் பிறவி இல்லை!

வினைகள் மூன்று! பிராரத்துவம், ஆகாமியம், சஞ்சிதம். குரு தீட்சை பெற்று தவம் செய்யும் சாதகன் பிராரத்துவகர்மம்  முதலில் கொஞ்சம் கொஞ்சமாக தீரும்! குரு தீட்சை பெற்ற சாதகன் உத்தமனாக வாழ்வதால் ஆகான்மிய கர்மம் தோன்றாது! தோன்றினால் குரு தடுத்து காத்தருள்வார்! "ஆகான்மியம் அவன் ஆசானையே சேரும் "! தொடர்ந்து தவம் செய்பவன் கண் ஒளி பெருகப் பெருக ஞானக்கனல் பெருகக் பெருக சஞ்சித கர்மமும் கொஞ்சங் கொஞ்சமாக வந்துதீரும்! நைந்து பியந்து போனாலும் நாதன் கை விடமாட்டான்! நான் மறைதீர்ப்பு! கர்மம் தொலையவே காரியம் செய்யணும்! சிவகாரியம்! - மோனம் கூடி சும்மா இருக்கும் நிலையே சிவகாரியம்! அந்த ஒளியை சரணடைந்தால் பேரின்பமே எந்நாளும்! நாமும் வாழலாம்! எல்லோரையும் வாழ வைக்கலாம்! குருவாக உயர்ந்து குவலயம் காக்கலாம்!

மரணம் எப்படி இருக்கும்?! மயக்கம்-தூக்கம்-மரணம் என மூன்று நிலை உள்ளது. மயக்கம் என்பது நம் உணர்வு பிசகும் நிலை. உயிர்
நிலை கொள்ளாமல் தடுமாறுவதே மயக்கம். மிகக்குறுகிய காலம் உணர்வு இல்லாமல் போவது.  தூக்கம் - நம் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். உயிர் நிலை கொள்ளும் நேரம், ஒடுங்கும் நேரம். நாடு உடலில் ஒடுங்கும். மிக குறைந்த அளவில் உணர்வு இருக்கும். மரணம் என்பது உயிர் உடலில் இருக்க முடியாமல் உடலை விட்டு வெளியேறுதல்.மரணம் நம் கையில்!? தடுக்கலாம்!? மரணம் வர காரணமான ஆகாமிய கர்மம் பாதிக்காத தன்மை பெறவேண்டும்.உடலை விட்டு உயிர் பிரியாமல் மிக மிக கவனமாக பார்த்து கொள்ளவேண்டும். உடலில் உயிரை இறைவன் எங்கு பத்திரமாக வைத்திருக்கிறானோ?! அங்கேயே அதை பத்திரப்படுத்துவது தான் புத்திசாலித்தனம்!

அங்கே இருக்கச்செய்து விட்டால் அது தான் ஞான சாதனை! தவம்!!பிறந்தது இறப்பதற்கல்ல! இறப்பை வெல்வதற்கு! அதுவே ஞானம். இதை உரைத்ததுவே சனாதானதர்மம். எல்லா மனிதர்களும் மரணம் வராமல் தடுக்க பாடுபட வேண்டும். "தூங்கி விழிக்க மறந்தவன்" என இறந்தவனை வள்ளலார் குறிப்பிடுகின்றார். இன்றைய உலகில் மனிதன் சாப்பாடு  சாப்பாடு என அலைகிறான். சாப்பிடதான் வாழ்கிறான் அதற்குதான் உழைக்கிறான் பணம் சேர்க்கிறான். ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ சாப்பாட்டுக்காகவே வாழ்கிறான்! பிறப்பதே சாப்பாட்டுக்காகத்தான்! சாப்பாடு அல்ல! சாவுக்கான பாடு சா- பாடு!? சாவதற்காக படாத பாடுபடுகிறான்.  எப்படியோ சாகிறான்!

சாககூடாது என்பதே சித்தர்கள் உபதேசம்!
சாகாதவனே சன்மார்க்கி!

இறைவன் திருவடி கண்மணியே

இறைவன் திருவடி கண்மணியே 

" மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த 
அணியே அணியும் அணிக் கழகே  அணுகாதவர்க்கு
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியே நொருவரைநின் பத்மபாதம் பணிந்த பின்னே"

அபிராமி பட்டர் அடியேனுக்கு உரைத்த அபிராமி அந்தாதி  பாடல் இது! ஆசி வழங்கி அருள் பாலித்தார் பட்டர் பெருமான்!

மணியே என்பதற்கு இதுவரை உரை எழுதிய யாரும் சரியாக எழுதவில்லை! மணியே என்றால் மாணிக்கமே என்று பொருள் சொல்லி இருக்கின்றனர். அப்படியல்ல!  மணியே - கண்மணியே, மணியின் ஒளியே கண்மணியில் உள்ள ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே - ஒளி பொருந்திய மணியை உடைய கண்ணே, அணியும் அணிக்கழகே - கண்ணுக்கு அழகே, அதிலுள்ள மணியின்  ஒளியே, அணுகாதவருக்கு பிணியே - கண்மணி ஒளியை அணுகாதவருக்கு பிறவி பிணியே, பிணிக்கு மருந்தே - பிறவியாகிய பிணி தீர மருந்து கண்மணி ஒளியே, அமரர் பெரு விருந்தே - தேவர்களுக்கும் பெரிய விருந்தே இது தான், பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே - கண்மணி ஒளியை இறைவனின் தாமரை திருவடி என்பது அதை பணிந்த நாம் வேறொருவரை பணியேன் என்பதே இதன் பொருள். இதுவே ஞானப்பொருள். இந்த ஒரு பாடல் போதும் ஞானம் பெறுவதற்கு ! அபிராமி  பட்டர் பிணிக்கு மருந்தே என நம் பிறவிப்பிணி தீர நம் கண்மணி யிலுள்ள ஒளி தான் மருந்து என்றார். இதையே வள்ளலாரும் நல்ல மருந்து  இம்மருந்து சுகம் நல்கும்  வைத்திய நாத மருந்து, அருள்வடிவான மருந்து அருட்பெருஞ்சோதி மருந்து என்றார்.

அபிராமி பட்டர் இறைவன் திருவடிகளை பணிந்த பின் வேறொருவரை பணிய மாட்டேன் என்றார். இதையே திருநாவுக்கரசரும் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்படோம் என்று உறுதிபட கூறுகிறார். ஞானிகள் எல்லோர் கூற்றும் ஒன்று தான்! நாம் ஞானம் பெற எல்லோரும் ஒன்றை தான் சொன்னார்கள்! நன்றை த் தான் சொன்னார்கள்!

"கண்ணின் மணியை கருத்தின் தெளிவை
விண்ணில் நின்று விளங்கும் மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணுகின்றவர் நாந் தொழுந் தெய்வமே"

தாயுமான சுவாமிகள் உரைத்த ஞானம்! இறைவனை, கண்ணின் மணியில் ஒளியாக இருப்பதை, எல்லாம் வல்ல இறைவனே விண்ணில் இருக்கும்
மெய்யானவரே அது என்பதை, கருத்தில் இருத்தி இரவு பகலாக எப்போதும் எண்ணி எண்ணி தவம் செய்பவரே நான் கும்பிடும் கடவுள் என உரைக்கிறார்தாயுமான சுவாமிகள். காளத்தியான்  அவன் என் கண்ணில் உள்ளான் காண்' என்  திருநாவுக்கரசர் உரைத்ததை உணர்வீர்.

1008 இதழ் தாமரை எப்படி மலரும்?



 காலை எழுவது முதல் இரவு படுக்க போவது வரை ஒரு மனிதன்  எப்படி, எப்படி இருக்கவேண்டும் என்பதை நித்திய கரும விதி என்று உபதேசம் செய்து உள்ளார். உடல் மலங்களை நீக்குபவன் ஆரோக்கியமாக வாழலாம்!? மன மலங்களை போக்குபவனே, மரணமிலாது வாழலாம்!?  உடல் மலத்தில், ஏழாவது ஆதாரமாக சகஸ்ரதளமாக நம் உச்சந்தலையில் உள்ள கோழை சொல்லபடுகிறது.  இதை நீக்குவது தவம் செய்பவர்களுக்கு  மட்டுமே  சாத்தியம்! இந்த கோழை முழுவதும் நீங்கினாலே, நம் மூளை கொஞ்சம் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கும்.தலையிலுள்ள கோழை நீங்க ஒரே வழி தவம் செய்வதுதான்! குரு உபதேசம் பெற்று நம் மெய்பொருளாகிய - திருவடியை நம் கண்களில் உள்ள ஒளியை குரு தீட்சை மூலம் உணர்ந்து , அந்த ஒளியை நினைந்து உணர்ந்து தவம் இயற்ற நெகிழ்ச்சி உண்டாகும், கண்ணில் கனல் பெருகும். அந்த ஞானக்கனல் உள்நாடி மூலமாக அக்னி கலையை அடைந்து அங்கிருந்து மேலே சகஸ்ரதளம் நோக்கி செல்லும் ஞானக்கனல் பெருக பெருக அந்த உஷ்ணத்தால் பல காலங்களாக உறைந்து போன கோழை மெல்ல மெல்ல உருகி   மூக்கு வழியாகவும் தொண்டை வழியாகவும் வெளியேறும் . எவ்வளவு கோழை உள்ளதோ அவ்வளவு காலம் நாம் கடுமையாக தவமியற்ற வேண்டும். "தவம் செய்வார்க்கு அவம் ஒருநாளுமில்லை" நாம் செய்யும் தவம், நம் ஞானத்தீயை நம் கண்வழி பெருக்கி அதனால் அது சகஸ்ரதளத்தை அடைந்து உணர்வு உண்டாகி  அனலால் இளகி கோழை கரைத்து ஒழுகும். இது சாதனை அனுபவம். தலைப் பகுதியிலுள்ள கோழை முழுவதமாக வெளியேறும் பட்சத்தில் மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒளி அலைகளால் அதிர்வு ஏற்பட்டு கொஞ்சங் கொஞ்சமாக இயங்க  ஆரம்பிக்கும். கோழையால் கவிழ்ந்து இருந்த மூளை பகுதி கனம் குறைந்ததும் மலர ஆரம்பிக்கும்.  அதுவரை கவிழ்ந்து இருந்த தாமரை இதழ்கள் மலர ஆரம்பிக்கும். 1008  பகுதியாக சிறு சிறு  பகுதியாக மூளை இருப்பதால் தான் 1008  இதழ் தாமரை என்றனர். ஒளி - சுத்த ஒளி, பொன்னொளி எழும்பி பிரகாசிப்பதால் இதை வள்ளலார் 1008  மாற்று  பொற்கோவில் என்றார். ஒவ்வொரு மனிதனும் தன் தலையிலுள்ள 1008  மாற்று பொற்கோவிலில், நடுநாயகமாக ஒளிவிட்டு பிரகாசிக்கும் அருட்பெருஞ்சோதியை தரிசிக்க வேண்டும். அவனே மரணமிலா பெருவாழ்வு பெறுவான்.  எத்தனையோ பிறவிகள் பிறந்து விட்டோம். இனிமேல் இந்த விளையாட்டு , வினை  ஆட்டுவிக்கும் பிறவி வேண்டாம்! பிறந்த இப்பிறப்பிலே தானே இனி  பிறவாமல் இருக்க இறவாமல் இருக்க வழி தேடுவோம்.  விழியிலே இருக்கும் ஒளியை உணர்ந்து மேன்மை அடைவோம். வாரீர் ஜெகத்தீரே!

ஜீவகாருண்யம் : ஒளியுடல் பெறுவது எப்படி ?

ஜீவகாருண்யம் : ஒளியுடல் பெறுவது எப்படி ?


ஜீவ காருண்ய ஒழுக்கம் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என வலியுறுத்தவே வள்ளலார் "ஜீவ காருண்ய ஒழுக்கம்" என்றொரு தனி நூலே இயற்றியுள்ளார். படியுங்கள்! முழுவதும் படியுங்கள்! ஆழ்ந்து படியுங்கள்! ஒவ்வொரு ஜீவர்கள்  மீதும் நீங்கள் காட்ட வேண்டிய அன்பு எப்படியிருக்கணும் என்று தெளிவாக விரிவாக கூறியிருக்கிறார் வள்ளலார்! பிற ஜீவர்கள் மீது மட்டும் அன்பு காட்டினால் போதுமா?! உன்ஜீவனை கருணையுடன் பார்!? என்கிறார் திருவருட்பிரகாசர்! கருணையோடு பார்!? என்கிறார் திருவருட்பிரகாசர்! சாப்பாடு போடுவதோ பிற பிற வகைகளில் பிற ஜீவர்களுக்கு சேவை செய்வது மட்டுமல்ல ஜீவகாருண்யம்!? உன் ஜீவனை பிறந்து பிறந்து செத்து செத்து துன்பப்படும் உன் ஜீவனை கருணையுடன்
பார்!! உன் ஜீவன் நித்திய ஜீவனே! பிறப்பும் இறப்பும் வாழ்க்கையில் படும் துன்பமும் ஏன்? எதனால்? எப்படி? என தெரிய வேண்டாமா? ஆக துன்பமே வாழ்வாகிறது பலருக்கு! ஏன் ? உன் ஜீவனும் இன்பமாக வாழ வழி காணக் கூடாதா?  பிற உயிர்போல கருதியாவது உன் ஜீவனிடம் கருணை காட்டு! இது தான் ஜீவகாருண்யம்! பிற ஜீவர்களிடம் கருணை காட்டுவது பரோபகாரம்! உன்ஜீவனை ரட்சிக்க அது ஒருவழி! உன் ஜீவனை கருணையோடு பார்!
உன் ஜீவன் கடைத்தேற யாது வழி? உன் ஜீவன் முக்தியடைய சத்விசாரம் செய்! நீ யார்? எங்கு இருந்து  வந்தாய்? எதனால் வந்தாய்? ஏனிந்த துன்பம்? இது தீர யாது வழி?  யாரிடம் போய் தெரிந்து கொள்வது? இதை சொல்ல வல்ல ஒரு ஞான சற்குருவை பணித்து உபதேசம் தீட்சை கேள்!  உன்  ஜீவனை ரட்சிக்க வழி தேடிக் கொள்! ஞானிகள் அனைவரும் உரைத்த ஜீவகாருண்யம் இதுதான்! ஓவ்வொரு ஞானியும் முதலில் தன் ஜீவனை நேசித்து இறையருள் பெற்றனர்! ஞான தவம் செய்து தன் ஜீவனை சக்தியுள்ளதாக்கினர்! பின்னரே  ஜீவர்களுக்கு சேவை செய்தனர்! சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!  முதலில் நீ உருப்படும் வழியை பார்? உன்னிடம் பொருள் இருந்தால் அல்லவா பிறருக்கு உன்னால் உதவமுடியும்!?  உன் ஜீவன் அருள் பெற்று இருந்தால் அல்லவா பிற ஜீவர்களை கருணையுடன் கண்டு உதவ முடியும்?!வள்ளலார்  என்ற ஜீவன் கடும்தவம் செய்து அருட்பெருஞ்ஜோதி யாகிய இறைவன் அருள் பெற்றதால் தான் இறைமயமானதால் தான் வாடிய பயிரை கண்டும் வாடினார்?!! அன்பும் கருணையும் தன்னுள் இருந்து தான் வெளிப்படனும்! அதற்க்கு முதலில் தன் ஜீவன் அன்புமயமாக கருணை இரக்கமே உருவாக, மலர நீ ஞான தவம் செய்! நீ உன் ஜீவனை கருணையுடன் பார்! வள்ளலார் தான் ஜீவனை பார்த்தார்! 9 வயதில் இருந்து ஆன்மீக சாதனை செய்தார் செய்தார் செய்து கொண்டே இருந்தார்! செய்த தவம் பலித்தது! பால் நினைத்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து இறைவன் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆட்க்கொண்டார்! அருள் பெற்றார்! ஊன உடலே ஒளியுடலாக ஓங்க பெற்றார்!

ஞான தானம் செய்வது

தங்க ஜோதி ஞான சபை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், கன்னியாகுமரி                                                                                      - www.vallalyaar.com

குருவை வணங்கக் - கூசி நின்றேனோ!

குருவின் காணிக்கை - கொடுக்க மறந்தேனோ!

Thursday 10 January 2013

அருட்பெருஞ்சோதி திருவடி தீட்சை - உயிர் ஒளி கண்டு இறை ஒளி(அருட்பெருஞ்சோதி) காணுதல் தனிபெரும்கருணை அருட்பெருஞ்சோதி திருவடி தீட்சை - உயிர் ஒளி கண்டு இறை ஒளி(அருட்பெருஞ்சோதி) காணுதல் யாருங்க இரவும் பகலும் சலிப்பு இல்லாமல் கருணையுடன் இந்த உடம்பை இயக்குவது? நான் யார்? உடலா? மனமா? இதை இரண்டை தவிர ஒன்றுமே தெரியவில்லையே!!. இறைவனை தேடி அலைந்து கொண்டு இருக்கும் ஆத்ம சாதகனுக்கு இறை ஞானம் சென்று அடையவேண்டும் என்பது குருவின் விருப்பம்.போலி குருவிடம் நேரத்தை வீண் செய்ய வேண்டாம் என்ற பெரும் கருணையால் ரகசியம் எல்லாம் வெட்ட வெளிச்சமாக விளக்கி உள்ளார்கள். திருவடி என்பது எது? உயிர் என்பது என்ன? உயிர் எங்கே உள்ளது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? உயிரை எப்படி பார்ப்பது? சத்தியஞான சபை என்பது என்ன? எழு திரை விளக்குவது எப்படி ? தவம் எப்படி செய்வது? ‘சும்மா இரு’ என்றால் என்ன ? இந்த கேள்விகள் உள்ளதா உங்களிடம் ? இதை சொல்லி உணர்த்த ஒரு குரு தேவை, நமக்கு இருக்கும் அறிவால் இதை அறியமுடியாது.குருவிடம் முழுதாக சரணாகதி அடைந்தால் (முழுமையாக ஒப்படைத்தால் ) மட்டுமே, குருவால் உங்களை மேல் நிலைக்கு அழைத்து செல்ல முடியும். குருவை சந்திந்து தீக்சை பெறுங்கள். கன்னியாகுமரி சென்று முக்கடலில் குளித்து கன்னியாகுமரி அம்மன் தரிசனம் பெற்று தீபமிட்டு, குரு காணிக்கை செலுத்தி உபதேசம் பெற்று, தீட்சை பெற்று, (சுக்கும சரீரம் - மறு பிறவி) துவிஜன் ஆகுங்கள்! தவம் செய்யுங்கள் குரு - வள்ளலார் எப்பொழுதும் உங்களுக்கு துணை இருப்பார். .சைவ உணவு உண்டு மது, புகை ஒழுக்கம் இன்மை இல்லாதவர்கள் தீட்சை பெறலாம். ஒழுக்கமாக உள்ளவனுக்கே அருள் கிட்டும். நின் திருவடித் தியானம் இல்லாமல் அவமே சிறு தெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள் பால் சேராமை எற்க ருளுவாய் - அம்மை திருப்பதிகம் தவம் - சும்மா இரு! மெய்ஞான சற்குரு வழியாக தெளிவு பெற உபதேசமும் அனுபவம் பெற தீட்சையும் பெற்று இந்த சாகாகல்வியை ஞானதானம் பெற்று தவம் செய்ய வேண்டும்.! சுருதி – யுக்தி - அனுபவம் இம்மூன்றுமே பூரண நிலையை கூட்டுவிக்கும்! ஞான தானம் பெற்று அதாவது தீட்சை பெற்று ஞான நூற்கள் படித்து யுக்தியினால் தெளிந்து தவம் செய்து அனுபவங்கள் பெற வேண்டும். தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றல் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமாமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! உடலை வருத்தி செய்யும் எந்த செயலும் அல்ல. தவம் என்றால் நான் யார் ? என அறிய உணர மெய்ஞான சற்குருவிடம் ஞான தானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே! இறைவன் எங்கு உள்ளான், எழு திரைகள் எங்கு உள்ளது, சத்தியஞான சபை என்பதை சாகாக்கல்வி புத்தகத்தில் பக்கம் 54 படிக்கவும் குரு தீட்சை பெற்று கண்ணில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும் அருவியென ! கண் திறந்து தான் தவம் செய்யவேண்டும். இங்ஙனம் தவம் தொடர்ந்தால் பல வித அனுபவங்கள் நாம் பெறலாம்! நமது வள்ளல் பெருமான் ஞான சரியை யில் கூறியபடி நாம் இங்ஙனம் தவம் செய்து வந்தால் பெறலாம் நல்ல வரமே! மரணமில பெருவாழ்வே! பிறவா பெருநிலை. அருட்பெரும் ஜோதி இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும் ஒளியாக இணையலாம்! பேரின்பம் பெறலாம்! “என் இரு கண்காள் உமது பெருந்தவம் எப்புவனத்தில் யார் தான் செய்வார்?” - திருஅருட்பா 2770 வள்ளலார் தன் இருகண் களாலாலும் செய்த பெருந்தவத்தை தானே வியந்து போற்றுகிறார்! என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம் என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்.வள்ளல் பெருமான் கண்மணி பற்றி பாடிய பாடல்கள் பல உள்ளன. இதுவே தவம்! இதனால் கிட்டுவதே ஞானம். ஞானம் தன்னை உணர்தலே. தவம் செய்ய நாம் காட்டுக்கு போகவேண்டியது இல்லை! குடும்பத்தை விட்டு ஓடவேண்டியது இல்லை. காவி உடுத்தி தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியது இல்லை. நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புறுத்தாது இருக்கவேண்டும். உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்.கடுமையான ஜப தபங்கள் வேண்டாம். சுருக்கமாக சொன்னால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற தடை அல்ல! இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். தவத்தை (குருவிடம் தீக்ஷை பெற்றபின்) விடாது தொடர்ந்து 30 நிமிடமோ ஒரு மணி நேரமோ செய்தால் போதுமானது. நீதி நேர்மை ஒழுக்கமே உங்கள் தவத்தை சிறப்பிக்கும் ! வேஷம் போடாதீர்கள்! எந்த தீய பழக்கங்களும் இல்லாது பார்த்து கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்குள் இருகிறானல்லவா? வெளியே கோவிலில், குலங்களில் மலைகளில் தேடாதீர். தவம் செய்வோர் சுத்த சைவ உணவையே உண்ணவேண்டும். ஆத்மா சாதகன் பட்டினி கிடக்கக்கூடாது, சிரிதளதாவது உண்ணவேண்டும். தவம் சித்திக்க வேண்டும் இறைவனோடு ஐக்கியம் ஆக வேண்டும் என்று நான் யார் என்பதை உணர வேண்டும் என்ற ஆன்ம பசியோடு நாம் இருக்க வேண்டும். புராணங்கள் கதைகளில் ரிஷிகள் செய்யும் பலவித தவங்களை கேள்வி பட்டு இருக்கிறோம்.இதை எல்லாம் பார்த்து பல மக்களுக்கு அவநம்பிக்கை பிறந்தது! அடடா இந்த மாதிரியெல்லாம் தவம் செய்ய முடியாது , இன்னொரு ஜென்மம் எடுத்து தான் வர வேண்டும் என அலுத்து கொள்வார்கள். இன்றும் இவ்வாறே பலர் உள்ளனர். உலக மக்களே அவநம்பிக்கை வேண்டாம்! உலகை உய்விக்க மெய்ஞானிகள் பலர் தோன்றி உள்ளனர். ஞான நூற்கள் பல தந்துள்ளார்கள். கவலை வேண்டாம். காலம் செய்த கோலம் ஞானம் பலகாலமாக மறைக்கப்பட்டு விட்டது? காரியவாதிகள் சூழ்ச்சி! ஞான சூரியன் திருவருட் பிரகாசவள்ளலார் பிறந்தார்! மடைமை என்னும் காரிருள் , அஞ்ஞானம் மக்களை விட்டு விலக கடைவிரித்தார்.!! கடைக்கண் காட்டினார் வள்ளலார்! ஞானம் துலங்க ஆரம்பித்தது. துளிர் விட ஆரம்பித்தது. வந்தார்! சொன்னார்! செய்தார்! வென்றார்! பெற்றார் ஒளி உடலை!!!!! தான் பெற்ற மரணமிலா பெருவாழ்வை சாகாகல்வியை எல்லாருக்கும் பறை சாற்றினார்!!பயிற்றுவித்தார்! இன்றும் அடியேன் மூலம் பயிற்றுவித்து இருக்கிறார். ஞான பாதை தான் மிக எளிதானது. ஞானதானம் செய்து அதனால் கிட்டும் புண்ணியம் பலன் மேலோங்கி தவம் சித்தித்து ஞானம் பெற்று பேரின்பம் பெருக! தானமும் தவமுமே ஞானம் பெற ஒரே வழி! ஞான தானமே ஞான சாதனையே நம்மை நம்மை இறைவனிடம் சேர்க்கும். நம்முள் ஜோதி தரிசனம் கிட்டும்! எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுனை அளவு நெருப்பாக இருக்கிறான்!! நம் உடம்பில் உட்புகு வாசலாகிய இரு கண்மணியில் ஞான குருவால் தீட்சை பெற்று கண்மணியில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து தியானம் செய்ய வேண்டும்!! தொடர்ந்து முயற்சி செய்யச் செய்ய நெகிழ்ச்சி ஏற்பட்டு கண்களில் நீர் ஆறாக பெருகி பாயும். இப்படியே சாதனை தொடரவேண்டும்!! அப்போது கண்மணியின் உள் உள்ள சிறுஜோதி கொஞ்சங் கொஞ்சமாக பெருகும்! கண்மணியின் சுழற்சி கூடுவாதால் இது நடக்கும்!! மனம் அங்கே நிற்பதால் கை கூடும்!! இரு கண்மணி வழி பெருகும் ஜோதி உள்புகுந்து சேர்ந்து அக்னி கலையுடன் போய் சேரும், அந்த இடம் நம் தலை உச்சிக்கு கீழ் , வாய் அண்ணாவுக்கு மேல் உள்ள இடமே!! "விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து உண்ணின் ருறுக்கியொ ரோப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டி களிம்பறுத் தானே " - திருமந்திரம் சனாதன தர்மத்திற்கு விளக்கம் இந்த ஒரு பாடலே போதும்!! நம் கண்மணியில், வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் ஆகிய கண்மணிகளிலும் தியானம் செய்வதால் பெருகும் ஒளி உட்புகுந்து அக்னி கலையில் சேரும் - அதுவே முச்சுடரும் ஒன்றான நிலை ! ஜோதி பாதம்! திருவடி!! இந்நிலைபெறும் முயற்சியிலிருக்கும் சாதகனுக்கு படி படியாக உச்சியில் இருந்து உள்ளங்கால் வாரை உள்ள 72000 நாடி நரம்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி பரவும். உடல் தூய்மையடையும்! நோய் நொடி வராது! உடல் உறுதி பெறும்! உள்ளம் பண்பாடும்! இறைஅருள் கிட்டும் ! எல்லா ஞானிகளின் ஆசிர்வாதமும் பெறுவான்! ஜோதி தரிசனம் கிட்டும்! திரை விலகும் ஆன்மா பிரகாசிக்கும்! அங்கிருந்து ஜோதி ஊர்த்துவமுகமாக மேல் எழுந்து உச்சியை சகஸ்ராரத்தை அடையும்! உச்சியை அடைந்தால் அறிவுப்பிரகாசம்! பரவெளி காணலாம்! வெட்ட வெளியில் உலாவலாம் ! பேரின்பம்! பேரின்பம்! பேரின்பமே! யார் குரு? சொல்பவன் குரு! கேட்பவன் சீடன் ! தெரியாததை தெரிவிப்பவன் குரு! தெரிந்து தெளிந்து கொள்பவனே சீடன்! நாம் பிறந்ததில் இருந்து வாழ்நாள் முழுவதும் கற்று கொண்டே தான் இருகிறோம். கல்வி கடவுள் சரஸ்வதி தேவியே! இன்னும் கற்று கொண்டு இருக்கிறாளாம். கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என ஞான கிழவி அவ்வை கூறுகிறாள்! ஒவ்வொரு விசயத்தையும் ஒவ்வொருவரிடம் இருந்து கற்கிறோம். எல்லாரும் குருவே ! இயற்கையில் இருந்து மற்ற ஜீவராசிகளிடம் இருந்து எவ்வளவோ கற்று கொள்கிறோம்! எல்லாமே குரு தான்! அப்படியானால் குரு என தனித்து சொல்ல என்ன காரணம்? எல்லாரும், எல்லாமும் பல விசயங்களை நமக்கு அறிவிக்கின்றனர் அவ்வளவுதான்! எல்லாவற்றுக்கும் வாழ்க்கையை நெறிபடுத்த அறிவிப்பதே வேலை. இது குருவல்ல! யார் நம் அறிவை தூண்டி, நாம் யார்? என அறிய வழிகாட்டி, விழியின் உணர்வை ஊட்டுகிறரோ அவரே குரு! ஒப்பற்ற குரு ! சத்குரு ! ஞான குரு! நாம் யார் என ஒருவன் உணர வழி காட்டும் அந்த ஒப்பற்ற குருவை! பெற்றாலே ஒருவன் வாழ்க்கை கடை தேற முடியும் ! உலக வாழ்வில் சிறப்பாக நோயின்றி வாழ்வாங்கு வாழ்ந்து இனி பிறவாமல் இருக்க யார் வழி சொல்கிறாரோ அவரே சத்குரு! அறியாமையில் உழலும் மனிதன் சிந்தனையை தூண்டிம பிறப்பறுக்க, விழியால் உணர்வூட்டி முன்னேற்றுபவரே ஞானகுரு! ஒப்பற்ற குருவே சத்குரு! சத்குருவே ஞான குரு! நாமும் பெற்றால் தான் தப்பித்தோம்! இல்லையேல் மீண்டும் மீண்டும் பிறவி பிணி தான்! மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வளர, வளர தான் ஒவ்வொன்றாக அறிந்து கொள்கிறான்! எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! பின் அவன் நல்லவன் ஆவதும் கேட்டவன் ஆவதும் அன்னை வளர்க்கையிலே! சூழ்நிலையிலே ! எந்தவொரு சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தாலும் எல்லோரும் இறைவன் தன்னை உணரும் சந்தர்ப்பத்தை அருள்கிறார்!! அவரவர் கர்ம வினைப்படி எல்லாம் நடந்தாலும் எல்லாருக்கும் இறைவன் அருள் புரிந்து ஞானம் பெற உதவுகிறார்! இதில் பெரும்பங்கு ஞானிகளை சேரும்! இறைநிலை பெற்ற சாகவரம் பெற்ற ஞானிகள் இயல்பே அதுதான்! ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனை உணரவேண்டும் என்பதற்காக கர்மவினையால் துன்புறும் நிலை மாற்றி வழிகாட்டி கூடவே இருந்து காத்து அருள்கிறார்கள். நாம் யாரையும் அறிந்திருக்க வேண்டியது இல்லை! நம்மை அவர்கள் அறிவார்கள்! ஞானிகளுக்கு சாதி மதம் இனம் மொழி நாடு ஒன்றும் கிடையாது ! யாதும் ஊரே யாவரும் கேளீர்! இதுவே அவர்கள் நிலை! "என் கடன் பணி செய்து கிடப்பதே" எந்த வித பேதமும் இன்றி எல்லோருக்கும் வலிந்து வந்து உதவி, காத்து அருள்பவர்கள் தான் ஞானிகள்! எண்ணில்லா சித்தர் ஞானிகள் தோன்றியது நம் நாட்டிலே! இங்கு பிறந்த நாம் அதற்க்கு பெருமை படவேண்டும்! கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் அவதரித்து, மரணமில்ல பெருவாழ்வு பெற்ற உன்னதமான பேரின்ப நிலை அடைந்தவர் திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்! இராமலிங்க சுவாமிகளை சத்குருவாக கொண்டு தான் அடியேன் வாழ்கிறேன் ! இராமலிங்க சுவாமிகள் உரைத்த திருவடி ஞானத்தை தான் என்குரு ஜோதி இராமசாமி தேசிகர் எமக்கு உபதேசித்தார், தீட்சை வழங்கினார்! கடந்த இருபத்தைந்து ஆண்டாக சாதனை செய்து இராமலிங்க சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்டு கண்ணியானனேன் ! எமக்கு இராமலிங்க சுவாமிகள் சுட்டிகாட்டி உணர்த்திய ஞான சித்தர் திருச்சி ஜோதி இராமசாமி தேசிகர் அவர்கள் சமாதி கொள்ளுமுன் அடியேனை அழைத்து குரு பீடத்தை அளித்தார்கள்! அடியேனை பக்குவபடுத்தி முதல் 12 ஆண்டு முடிவில் "கண்மணிமாலை" எழுதி வெளியிட வைத்தார்கள்! அடுத்த 12 ஆண்டிற்குள் என்னை குரு பீடத்தில் இருத்திவிட்டார் வள்ளலார். அடியேனை குருவாக இருத்தி உள்ளிருந்து தீட்சை வழங்குவதும் அவர்களே அடியேன் செய்த புண்ணியம்! ஞானவான்களின் அருள் கிட்டி இன்று ஞான குருவாக இருக்கிறேன்! அவர்கள் இட்ட பணியை செவ்வனே செய்கிறேன்! செம்மையாக செய்துவைப்பதும் அவர்களே! உலகோரே வாருங்கள் ! உபதேசம் பெறுங்கள் ! தீட்சை பெறுவது அவசியம்! அரிதான இப்பிறவி ஆண்டவனை அறியவே! காலம் தாழ்த்தாதீர்! கண் திறக்க வாருங்கள்! குரு யார் என தேர்ந்தெடுப்பதில் பலருக்கு குழப்பம். தன் சாதியில் ஒரு சாமியாரை போற்றுகிறது ஒரு கூட்டம்.தன் மதத்தில் உள்ள சாமியாரை கொண்டாடுகிறது மற்றொரு கூட்டம், தன் மொழி பேசும் ஒருவனை பாராட்டுகிறது இன்னொரு கூட்டம் . அரபியில் சொன்னாலும், ஹீப்ருவில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் சமஸ்கிரதத்தில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் எல்லாராலும் சொல்ல பட்டது இறைவனை பற்றி மட்டுமே! உலகுக்கு ஆதி குரு முதல் குரு தட்சிணமூர்த்தி தான் ! இதுவே உண்மை !அதன்பின் தந்தைக்கே உபதேசித்தான் தனயன் ! அகத்தியருக்கும் அருணகிரிக்கும் உபதேசித்தான் ! இந்த வழி வந்த, வாழையடி வாழைஎன வந்தவர் தான் வள்ளல் இராமலிங்க சுவாமிகள் ! இவர்கள் உள்இருந்து உணர்த்த அடியேன் உபதேசம் தீட்சை வழங்குகிறேன். "நான் யார் " எனவும் அறிவை தந்து, உணர்த்தி நம்மை வழி நடத்துபவரே உண்மை குரு! வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் - வேறோருவர்க்கும் எட்டாத புட்பம் - இனி முடிந்து கட்டாத லிங்கம் கருத்தினுள்ளே முட்டாத பூசை இறையாத தீர்த்தம் ! இதை சொன்ன தெரிந்தவனே இறைவனை உணர்த்த தகுதியானவன் ரகசியம் என இருப்பதை தெளிவு படுத்தி உணரவைப்பவனே குரு! புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. வருக பலன் - ஆன்மலாபம்! குருவாக இருந்து ஞானிகளின் அருளால் தீட்சை வழங்கி வருகிறேன், வாருங்கள். தெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே! - திருமந்திரம் அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெரும்கருணை அருட்பெருஞ்சோதி கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக!! "கலையுரைத்த கற்பனையை நிலைஎனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற" கலை - ஒளிக்கலை! கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வர் ஞானம் பெறார்! ஏன்? கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்பவர்களுக்கு மாயை கலையாக ஒளியாக வெளிப்பட்டு மனம் மயங்கும்படியாக பலபல காட்சிகளை காட்டும். உடனே ஆஹா எனக்குப் பல அற்புத காட்சிகள் காண கிடைக்கின்றது. நானே ஞானம் பெற்றவன் நானே பெரியவன் என , ஏமாந்து, இறுமாந்து, பிதற்றுவான்!! கண்ணை மூடி தியானம் செய்பவன் நிச்சயம் ஏமாந்து போவான்! மாயை அற்ப காட்சிகளையும் அற்ப சித்திகளையும் அருளும்! அந்தச் சிறு சிறு ஒளியை கண்டு கண்மூடி தவம் செய்பவன் மனம் மயங்கி தான் எல்லாம் அடைந்து விட்டதாக கருதி பல்லிளித்து இறுமாந்து ஆணவம் மிகுந்து கெட்டுவிடுவான்! அதனால் தான் வள்ளல் பெருமான் கலையுரைத்த கற்பனையே உயர் நிலை என கொண்டாடும் கண் மூடி வழக்கமெலாம் மண்மூடி போகட்டும் போகட்டும் என்று கூறுகிறார்! கண்ட கண்ட வழிமுறைகளை பின்பற்றி மக்கள் கண்மூடித்தனமாக செயல்பட்டு இறந்து போகின்றார்களே என்ற வேதனையால் தான் வள்ளல் பெருமான் இதைக்கூறினார்! இறைவன் நிலை, நம் நிலையை தெளிவாக உறுதியாக இதுதான் என அறுதியிட்டு கூறுவதே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் வழங்கும் திருவடி உபதேசமாகும்! இப்படி திருவடி உபதேசம் வழங்கும் சன்மார்கமே சிறந்த ஒப்பற்ற ஞான மார்க்கத்தை உலகுக்கு வழங்குகிறது ! திருவடி உபதேசம் பெற்றவர் மெய்யுணர்வு பெற திருவடி தீட்சை பெற கன்னியாகுமரி தங்க ஜோதி ஞான சபைக்கு வருக! உங்கள் நடுக்கண்ணை திறந்து ஞானம்பெற வழிகாட்டுவார் வள்ளலார்! கண்ணை திறந்து தான் தவம் செய்ய வேண்டும்! கண்ணை திறந்தால்தானே, நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்தால் தானே கண்ணீர் பெருக்கெடுத்து நம் உடலும் நனையும். ஆகவே மெய்யுணர்வு பெற்று கண்ணை திறந்து இருந்துதான் சும்மா இருந்துதான் தவம் செய்ய வேண்டும்!! இது ஒன்று தான் ஞான வழி. கண்ணை மூடி செய்யும் எந்த பயிற்சியும் தியானமும் ஞானத்தை தராது?! உங்கள் அகக்கண்ணை ஞான சற்குரு திறந்து திருவடி தீட்சை தருவார்! உங்கள் அறிவுக்கண் திறக்கும்! மனக்கண் திறக்கும்! ஞானக்கண் பெறுவீர்கள்! ஊனக்கண்ணால் விழித்திருந்து பார்த்து உணர்ந்து, இறைவனை அடைய வேண்டும் அடைந்த தீர்வது என்ற ஆன்ம பசியோடு சும்மா இருந்து மனதில் எண்ணமே தோன்றாத படி மனதையே திருவடியில் ஒப்படைத்து தனித்திருந்து தவம் செய்பவனே கண்ணை திறந்து இருந்து தவம் செய்பவனே ஞானம் பெறுவான்! பதவி - முக்தி - மோட்சம் கிட்டும்! வினை கழித்து தன்னை உணர்வது எப்படி? "வெவ்வினைக் கீடான காயம் இது மாயம்" நாம் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு தகுந்தபடி நமக்கு உடல் தந்து இறைவன் நம்மை படைத்து அனுப்பினார் உலகத்தில்! இந்த உடல் வினைக்கு தக்கபடி செயல்படுவதால் அனைத்தும் மாயையே! வினைப்பயனே! இப்படியே போனால் அழிந்து விடும் உடல்! அழித்து விடுவர் உடலை! சுட்டோ! இட்டோ! அழியுடம்பை அழியாமை ஆக்கும் வகையே, கண்மணி ஒளியை கண்டு உணர்ந்து தவம் செய்வதாகும்! ஒப்பற்ற மேலான இந்த தவம் சும்மா இருப்பதேயாகும்! "வினை போகமே ஒரு தேகங்கண்டாய்" என ஞானி ஒருவர் கூற்றும் இப்பொருளே! தேகம் அழியாமலிருக்க வேண்டுமானால் வினை இல்லாமலாக வேண்டும்! அதற்க்கு தான் ஞான சாதனை!- தவம்!- சும்மா இருக்கவேண்டும்! கண்மணி ஒளியை குருவிடம் தீட்சை பெற்று உணர்ந்து தவம் செய்யச்செய்ய ஒளிபெருகி சூட்சுமம் நிலையிலிருக்கும் வினையாகிய திரை உருகி கரைந்து விடும்! வினை தீரத்தீர ஒளி மிஞ்சும்! மிஞ்சுகின்ற ஒளி உடல் முழுவதும் பரவும்! ஊன உடலே ஒளி உடல் ஆகும்! பிறவி கிடையாது! வினை இல்லையெனில் பிறவி இல்லை! வினைகள் மூன்று! பிராரத்துவம், ஆகாமியம், சஞ்சிதம். குரு தீட்சை பெற்று தவம் செய்யும் சாதகன் பிராரத்துவகர்மம் முதலில் கொஞ்சம் கொஞ்சமாக தீரும்! குரு தீட்சை பெற்ற சாதகன் உத்தமனாக வாழ்வதால் ஆகான்மிய கர்மம் தோன்றாது! தோன்றினால் குரு தடுத்து காத்தருள்வார்! "ஆகான்மியம் அவன் ஆசானையே சேரும் "! தொடர்ந்து தவம் செய்பவன் கண் ஒளி பெருகப் பெருக ஞானக்கனல் பெருகக் பெருக சஞ்சித கர்மமும் கொஞ்சங் கொஞ்சமாக வந்துதீரும்! நைந்து பியந்து போனாலும் நாதன் கை விடமாட்டான்! நான் மறைதீர்ப்பு! கர்மம் தொலையவே காரியம் செய்யணும்! சிவகாரியம்! - மோனம் கூடி சும்மா இருக்கும் நிலையே சிவகாரியம்! அந்த ஒளியை சரணடைந்தால் பேரின்பமே எந்நாளும்! நாமும் வாழலாம்! எல்லோரையும் வாழ வைக்கலாம்! குருவாக உயர்ந்து குவலயம் காக்கலாம்! மரணம் எப்படி இருக்கும்?! மயக்கம்-தூக்கம்-மரணம் என மூன்று நிலை உள்ளது. மயக்கம் என்பது நம் உணர்வு பிசகும் நிலை. உயிர் நிலை கொள்ளாமல் தடுமாறுவதே மயக்கம். மிகக்குறுகிய காலம் உணர்வு இல்லாமல் போவது. தூக்கம் - நம் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். உயிர் நிலை கொள்ளும் நேரம், ஒடுங்கும் நேரம். நாடு உடலில் ஒடுங்கும். மிக குறைந்த அளவில் உணர்வு இருக்கும். மரணம் என்பது உயிர் உடலில் இருக்க முடியாமல் உடலை விட்டு வெளியேறுதல்.மரணம் நம் கையில்!? தடுக்கலாம்!? மரணம் வர காரணமான ஆகாமிய கர்மம் பாதிக்காத தன்மை பெறவேண்டும்.உடலை விட்டு உயிர் பிரியாமல் மிக மிக கவனமாக பார்த்து கொள்ளவேண்டும். உடலில் உயிரை இறைவன் எங்கு பத்திரமாக வைத்திருக்கிறானோ?! அங்கேயே அதை பத்திரப்படுத்துவது தான் புத்திசாலித்தனம்! அங்கே இருக்கச்செய்து விட்டால் அது தான் ஞான சாதனை! தவம்!!பிறந்தது இறப்பதற்கல்ல! இறப்பை வெல்வதற்கு! அதுவே ஞானம். இதை உரைத்ததுவே சனாதானதர்மம். எல்லா மனிதர்களும் மரணம் வராமல் தடுக்க பாடுபட வேண்டும். "தூங்கி விழிக்க மறந்தவன்" என இறந்தவனை வள்ளலார் குறிப்பிடுகின்றார். இன்றைய உலகில் மனிதன் சாப்பாடு சாப்பாடு என அலைகிறான். சாப்பிடதான் வாழ்கிறான் அதற்குதான் உழைக்கிறான் பணம் சேர்க்கிறான். ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ சாப்பாட்டுக்காகவே வாழ்கிறான்! பிறப்பதே சாப்பாட்டுக்காகத்தான்! சாப்பாடு அல்ல! சாவுக்கான பாடு சா- பாடு!? சாவதற்காக படாத பாடுபடுகிறான். எப்படியோ சாகிறான்! சாககூடாது என்பதே சித்தர்கள் உபதேசம்! சாகாதவனே சன்மார்க்கி! இறைவன் திருவடி கண்மணியே " மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த அணியே அணியும் அணிக் கழகே அணுகாதவர்க்கு பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியே நொருவரைநின் பத்மபாதம் பணிந்த பின்னே" அபிராமி பட்டர் அடியேனுக்கு உரைத்த அபிராமி அந்தாதி பாடல் இது! ஆசி வழங்கி அருள் பாலித்தார் பட்டர் பெருமான்! மணியே என்பதற்கு இதுவரை உரை எழுதிய யாரும் சரியாக எழுதவில்லை! மணியே என்றால் மாணிக்கமே என்று பொருள் சொல்லி இருக்கின்றனர். அப்படியல்ல! மணியே - கண்மணியே, மணியின் ஒளியே கண்மணியில் உள்ள ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே - ஒளி பொருந்திய மணியை உடைய கண்ணே, அணியும் அணிக்கழகே - கண்ணுக்கு அழகே, அதிலுள்ள மணியின் ஒளியே, அணுகாதவருக்கு பிணியே - கண்மணி ஒளியை அணுகாதவருக்கு பிறவி பிணியே, பிணிக்கு மருந்தே - பிறவியாகிய பிணி தீர மருந்து கண்மணி ஒளியே, அமரர் பெரு விருந்தே - தேவர்களுக்கும் பெரிய விருந்தே இது தான், பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே - கண்மணி ஒளியை இறைவனின் தாமரை திருவடி என்பது அதை பணிந்த நாம் வேறொருவரை பணியேன் என்பதே இதன் பொருள். இதுவே ஞானப்பொருள். இந்த ஒரு பாடல் போதும் ஞானம் பெறுவதற்கு ! அபிராமி பட்டர் பிணிக்கு மருந்தே என நம் பிறவிப்பிணி தீர நம் கண்மணி யிலுள்ள ஒளி தான் மருந்து என்றார். இதையே வள்ளலாரும் நல்ல மருந்து இம்மருந்து சுகம் நல்கும் வைத்திய நாத மருந்து, அருள்வடிவான மருந்து அருட்பெருஞ்சோதி மருந்து என்றார். அபிராமி பட்டர் இறைவன் திருவடிகளை பணிந்த பின் வேறொருவரை பணிய மாட்டேன் என்றார். இதையே திருநாவுக்கரசரும் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்படோம் என்று உறுதிபட கூறுகிறார். ஞானிகள் எல்லோர் கூற்றும் ஒன்று தான்! நாம் ஞானம் பெற எல்லோரும் ஒன்றை தான் சொன்னார்கள்! நன்றை த் தான் சொன்னார்கள்! "கண்ணின் மணியை கருத்தின் தெளிவை விண்ணில் நின்று விளங்கும் மெய்யினை எண்ணி எண்ணி இரவும் பகலுமே நண்ணுகின்றவர் நாந் தொழுந் தெய்வமே" தாயுமான சுவாமிகள் உரைத்த ஞானம்! இறைவனை, கண்ணின் மணியில் ஒளியாக இருப்பதை, எல்லாம் வல்ல இறைவனே விண்ணில் இருக்கும் மெய்யானவரே அது என்பதை, கருத்தில் இருத்தி இரவு பகலாக எப்போதும் எண்ணி எண்ணி தவம் செய்பவரே நான் கும்பிடும் கடவுள் என உரைக்கிறார்தாயுமான சுவாமிகள். காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான் காண்' என் திருநாவுக்கரசர் உரைத்ததை உணர்வீர். 1008 இதழ் தாமரை எப்படி மலரும்? காலை எழுவது முதல் இரவு படுக்க போவது வரை ஒரு மனிதன் எப்படி, எப்படி இருக்கவேண்டும் என்பதை நித்திய கரும விதி என்று உபதேசம் செய்து உள்ளார். உடல் மலங்களை நீக்குபவன் ஆரோக்கியமாக வாழலாம்!? மன மலங்களை போக்குபவனே, மரணமிலாது வாழலாம்!? உடல் மலத்தில், ஏழாவது ஆதாரமாக சகஸ்ரதளமாக நம் உச்சந்தலையில் உள்ள கோழை சொல்லபடுகிறது. இதை நீக்குவது தவம் செய்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம்! இந்த கோழை முழுவதும் நீங்கினாலே, நம் மூளை கொஞ்சம் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கும்.தலையிலுள்ள கோழை நீங்க ஒரே வழி தவம் செய்வதுதான்! குரு உபதேசம் பெற்று நம் மெய்பொருளாகிய - திருவடியை நம் கண்களில் உள்ள ஒளியை குரு தீட்சை மூலம் உணர்ந்து , அந்த ஒளியை நினைந்து உணர்ந்து தவம் இயற்ற நெகிழ்ச்சி உண்டாகும், கண்ணில் கனல் பெருகும். அந்த ஞானக்கனல் உள்நாடி மூலமாக அக்னி கலையை அடைந்து அங்கிருந்து மேலே சகஸ்ரதளம் நோக்கி செல்லும் ஞானக்கனல் பெருக பெருக அந்த உஷ்ணத்தால் பல காலங்களாக உறைந்து போன கோழை மெல்ல மெல்ல உருகி மூக்கு வழியாகவும் தொண்டை வழியாகவும் வெளியேறும் . எவ்வளவு கோழை உள்ளதோ அவ்வளவு காலம் நாம் கடுமையாக தவமியற்ற வேண்டும். "தவம் செய்வார்க்கு அவம் ஒருநாளுமில்லை" நாம் செய்யும் தவம், நம் ஞானத்தீயை நம் கண்வழி பெருக்கி அதனால் அது சகஸ்ரதளத்தை அடைந்து உணர்வு உண்டாகி அனலால் இளகி கோழை கரைத்து ஒழுகும். இது சாதனை அனுபவம். தலைப் பகுதியிலுள்ள கோழை முழுவதமாக வெளியேறும் பட்சத்தில் மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒளி அலைகளால் அதிர்வு ஏற்பட்டு கொஞ்சங் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கும். கோழையால் கவிழ்ந்து இருந்த மூளை பகுதி கனம் குறைந்ததும் மலர ஆரம்பிக்கும். அதுவரை கவிழ்ந்து இருந்த தாமரை இதழ்கள் மலர ஆரம்பிக்கும். 1008 பகுதியாக சிறு சிறு பகுதியாக மூளை இருப்பதால் தான் 1008 இதழ் தாமரை என்றனர். ஒளி - சுத்த ஒளி, பொன்னொளி எழும்பி பிரகாசிப்பதால் இதை வள்ளலார் 1008 மாற்று பொற்கோவில் என்றார். ஒவ்வொரு மனிதனும் தன் தலையிலுள்ள 1008 மாற்று பொற்கோவிலில், நடுநாயகமாக ஒளிவிட்டு பிரகாசிக்கும் அருட்பெருஞ்சோதியை தரிசிக்க வேண்டும். அவனே மரணமிலா பெருவாழ்வு பெறுவான். எத்தனையோ பிறவிகள் பிறந்து விட்டோம். இனிமேல் இந்த விளையாட்டு , வினை ஆட்டுவிக்கும் பிறவி வேண்டாம்! பிறந்த இப்பிறப்பிலே தானே இனி பிறவாமல் இருக்க இறவாமல் இருக்க வழி தேடுவோம். விழியிலே இருக்கும் ஒளியை உணர்ந்து மேன்மை அடைவோம். வாரீர் ஜெகத்தீரே! ஜீவகாருண்யம் : ஒளியுடல் பெறுவது எப்படி ? ஜீவ காருண்ய ஒழுக்கம் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என வலியுறுத்தவே வள்ளலார் "ஜீவ காருண்ய ஒழுக்கம்" என்றொரு தனி நூலே இயற்றியுள்ளார். படியுங்கள்! முழுவதும் படியுங்கள்! ஆழ்ந்து படியுங்கள்! ஒவ்வொரு ஜீவர்கள் மீதும் நீங்கள் காட்ட வேண்டிய அன்பு எப்படியிருக்கணும் என்று தெளிவாக விரிவாக கூறியிருக்கிறார் வள்ளலார்! பிற ஜீவர்கள் மீது மட்டும் அன்பு காட்டினால் போதுமா?! உன்ஜீவனை கருணையுடன் பார்!? என்கிறார் திருவருட்பிரகாசர்! கருணையோடு பார்!? என்கிறார் திருவருட்பிரகாசர்! சாப்பாடு போடுவதோ பிற பிற வகைகளில் பிற ஜீவர்களுக்கு சேவை செய்வது மட்டுமல்ல ஜீவகாருண்யம்!? உன் ஜீவனை பிறந்து பிறந்து செத்து செத்து துன்பப்படும் உன் ஜீவனை கருணையுடன் பார்!! உன் ஜீவன் நித்திய ஜீவனே! பிறப்பும் இறப்பும் வாழ்க்கையில் படும் துன்பமும் ஏன்? எதனால்? எப்படி? என தெரிய வேண்டாமா? ஆக துன்பமே வாழ்வாகிறது பலருக்கு! ஏன் ? உன் ஜீவனும் இன்பமாக வாழ வழி காணக் கூடாதா? பிற உயிர்போல கருதியாவது உன் ஜீவனிடம் கருணை காட்டு! இது தான் ஜீவகாருண்யம்! பிற ஜீவர்களிடம் கருணை காட்டுவது பரோபகாரம்! உன்ஜீவனை ரட்சிக்க அது ஒருவழி! உன் ஜீவனை கருணையோடு பார்! உன் ஜீவன் கடைத்தேற யாது வழி? உன் ஜீவன் முக்தியடைய சத்விசாரம் செய்! நீ யார்? எங்கு இருந்து வந்தாய்? எதனால் வந்தாய்? ஏனிந்த துன்பம்? இது தீர யாது வழி? யாரிடம் போய் தெரிந்து கொள்வது? இதை சொல்ல வல்ல ஒரு ஞான சற்குருவை பணித்து உபதேசம் தீட்சை கேள்! உன் ஜீவனை ரட்சிக்க வழி தேடிக் கொள்! ஞானிகள் அனைவரும் உரைத்த ஜீவகாருண்யம் இதுதான்! ஓவ்வொரு ஞானியும் முதலில் தன் ஜீவனை நேசித்து இறையருள் பெற்றனர்! ஞான தவம் செய்து தன் ஜீவனை சக்தியுள்ளதாக்கினர்! பின்னரே ஜீவர்களுக்கு சேவை செய்தனர்! சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்! முதலில் நீ உருப்படும் வழியை பார்? உன்னிடம் பொருள் இருந்தால் அல்லவா பிறருக்கு உன்னால் உதவமுடியும்!? உன் ஜீவன் அருள் பெற்று இருந்தால் அல்லவா பிற ஜீவர்களை கருணையுடன் கண்டு உதவ முடியும்?!வள்ளலார் என்ற ஜீவன் கடும்தவம் செய்து அருட்பெருஞ்ஜோதி யாகிய இறைவன் அருள் பெற்றதால் தான் இறைமயமானதால் தான் வாடிய பயிரை கண்டும் வாடினார்?!! அன்பும் கருணையும் தன்னுள் இருந்து தான் வெளிப்படனும்! அதற்க்கு முதலில் தன் ஜீவன் அன்புமயமாக கருணை இரக்கமே உருவாக, மலர நீ ஞான தவம் செய்! நீ உன் ஜீவனை கருணையுடன் பார்! வள்ளலார் தான் ஜீவனை பார்த்தார்! 9 வயதில் இருந்து ஆன்மீக சாதனை செய்தார் செய்தார் செய்து கொண்டே இருந்தார்! செய்த தவம் பலித்தது! பால் நினைத்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து இறைவன் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆட்க்கொண்டார்! அருள் பெற்றார்! ஊன உடலே ஒளியுடலாக ஓங்க பெற்றார்! ஞான தானம் செய்வது தங்க ஜோதி ஞான சபை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், கன்னியாகுமரி - www.vallalyaar.com குருவை வணங்கக் - கூசி நின்றேனோ! குருவின் காணிக்கை - கொடுக்க மறந்தேனோ! Contact in English: Vijayan – 09916495495 Vimal – 9962217654 .தமிழில் தொடர்பு கொள்ள. அரவிந்தன் – 9944009497 லோகநாதன் – 9380225365 வினோத் – 9944767995 shivamjothi@gmail.com


அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி                                                                                                                                                                

தனிபெரும்கருணை
அருட்பெருஞ்சோதி

திருவடி தீட்சை -  உயிர் ஒளி கண்டு இறை ஒளி(அருட்பெருஞ்சோதி) காணுதல்

யாருங்க இரவும் பகலும் சலிப்பு இல்லாமல் கருணையுடன் இந்த உடம்பை இயக்குவது?  நான் யார்?  உடலா? மனமா? இதை இரண்டை தவிர ஒன்றுமே தெரியவில்லையே!!.  இறைவனை தேடி அலைந்து கொண்டு இருக்கும் ஆத்ம சாதகனுக்கு இறை ஞானம் சென்று அடையவேண்டும் என்பது குருவின் விருப்பம்.போலி குருவிடம் நேரத்தை வீண் செய்ய வேண்டாம் என்ற பெரும் கருணையால் ரகசியம் எல்லாம்  வெட்ட வெளிச்சமாக விளக்கி உள்ளார்கள்.

திருவடி என்பது எது?

உயிர் என்பது என்ன?

உயிர் எங்கே உள்ளது?

அதை பார்க்க தடை என்ன?

தடையை எப்படி தீர்ப்பது?

உயிரை எப்படி பார்ப்பது?

சத்தியஞான சபை என்பது என்ன?

எழு திரை விளக்குவது எப்படி ?

தவம் எப்படி செய்வது?

''சும்மா இரு’ என்றால் என்ன ?

இந்த கேள்விகள் உள்ளதா உங்களிடம் ? இதை சொல்லி உணர்த்த ஒரு குரு தேவை, நமக்கு இருக்கும் அறிவால் இதை அறியமுடியாது.குருவிடம் முழுதாக சரணாகதி அடைந்தால் (முழுமையாக ஒப்படைத்தால் ) மட்டுமே, குருவால் உங்களை மேல்  நிலைக்கு அழைத்து செல்ல முடியும். குருவை சந்திந்து தீக்சை பெறுங்கள். கன்னியாகுமரி சென்று முக்கடலில் குளித்து கன்னியாகுமரி அம்மன் தரிசனம் பெற்று தீபமிட்டு, குரு காணிக்கை செலுத்தி உபதேசம் பெற்று, தீட்சை பெற்று, (சுக்கும சரீரம் - மறு பிறவி) துவிஜன் ஆகுங்கள்!  தவம் செய்யுங்கள் குரு - வள்ளலார் எப்பொழுதும் உங்களுக்கு துணை இருப்பார். .சைவ உணவு உண்டு மது, புகை ஒழுக்கம் இன்மை  இல்லாதவர்கள்  தீட்சை பெறலாம். ஒழுக்கமாக உள்ளவனுக்கே அருள் கிட்டும்.

நின் திருவடித் தியானம் இல்லாமல் அவமே
சிறு தெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள் பால்
சேராமை எற்க ருளுவாய் -  அம்மை திருப்பதிகம்