Wednesday 10 July 2013

திருமந்திரம் கூறும் சத்தியம் இதுவே!

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே”

திருமந்திரம் கூறும் சத்தியம் இதுவே! தமிழ் மறையான இதுவே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை ஞானம்! இறை இரகசியம்!

நம் உடலாகிய கோயிலில் உயிராக தானே வீற்றிருக்கிறான் எல்லாம் வல்ல இறைவன்! இறைவன் பெருஞ்ஜோதியானவன் எங்கும் நிறைந்தவன்! இறைவனே ஜீவனாக சிறு ஜோதியாக நம் உடலில் உறைந்துள்ளான்! என்ன விந்தை இது?! அவனே படைத்து, காத்து, அழித்து, எதற்கு இந்த நாடகம்?! ஏனிந்த திருவிளையாடல்!?

இன்றுவரை இந்த உலகில் தோன்றிய மதங்களும், மார்க்கங்களும், மகான்கள் அனைவரும் சொன்னதும் ஒப்புக்கொண்டதும் இந்த உண்மை ஒன்றையே! இறைவன் ஒருவரே அவர் ஜோதி ஸ்வரூபம்! நம் உடலில் உயிராக இருப்பதும் அவரே! அவனின்றி ஓர் அணுவும் அசையாது! இதை மறுப்பவர் யாருமில்லை! எம்மதமும் இந்த உண்மைகளை மறுத்ததில்லை! உலகர் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரே உண்மை இது ஒன்றே!!

எல்லாம் வல்ல இறைவன் பெருஞ்ஜோதிமயமானவன் என்றும் அவனே சிறுஜோதியாக நம் உடலில் உயிராக இருக்கின்றான் என்பதும் தான் மனிதனாக பிறந்த நாம் அரிய வேண்டிய மாபெரும் இரகசியம்!

இதை அறிந்தவன், தகுந்த குருமூலம் உணர்ந்தவன் தான் ஞானம் பெறுவான்! அறிந்தால் மட்டும் போதாது! குருமூலம் தீட்சை மூலம் உணரவும் வேண்டும்! தவம் செய்யவும் வேண்டும்! அப்போதுதான் ஞானம் கிட்டும்! இறையருள் பெறலாம்!

இந்த ஞான இரகசியத்தை அறியாமல் இந்த உலகில் நீங்கள் வேறு எதை செய்தாலும் ஞானம் கிட்டாது!?

தன் உயிரை அறிவதே, உணர்வதே இறைவனை அறிவதும் உணர்வதுமாகும்! தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும்! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

உயிர் நம் உடலில் எங்கிருக்கிறது? என தெரிந்தால் தானே! எப்படி இருக்கிறது என்று தெரிந்தால் தானே தவம் செய்ய முடியும்?!

கடோபநிசத்தில் எமதர்மனிடம் நசிகேசன் உயிர் பற்றி, கடவுள் பற்றி கேட்க அவர் கூறுகிறார், “இறைவன் மனிததேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் புகையில்லாத ஜோதியாக விளங்குகிறான்”. என்று!? இதில் உடனே நாம் இரு விசயங்களை தெரிந்துகொள்ளலாம். ஒன்று இறைவன் மனித தேகத்திலும் உள்ளார் என்பது!

மனித தேகத்தில் உள்ளார் சரி!? நாம் வெளியே பார்க்கும் ஜோதி – தீ புகையுள்ளது இறைவன் பெருஞ்ஜோதியானவன் – தீ வண்ணன் புகையில்லாத ஜோதிஸ்வருபம் இதுவும் சரி!? நம் உடலில் எங்கிருக்கிறது? அந்த ஜோதி – உயிர் – இறைவன்? சின்முத்திரை அளவான இடம்! இதுதான் மாபெரும் இரகசியம்! குருஊபதேசம் மூலம் அரிய வேண்டியது! அடியேன் இங்கே குரு எங்களுக்கு உபதேசித்ததை எழுதுகிறேன்!

நன்றாக கவனமாக பாருங்கள்! மனித தேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் உள்ளார்! சின்முத்திரை பிடித்துக் கொண்டு உட்கார சொல்லவில்லை! சின்முத்திரை பிடித்தால் அதாவது நமது கை பெருவிரலும் ஆள்காட்டி விரலும் தொட்டுக் கொண்டநிலை அல்ல! ஆள்காட்டி விரல் மடக்கி பெருவிரலின் மத்தியிலுள்ள கோடை தொட்ட நிலையில் மற்ற மூன்று விரலும் நீட்டியபடி இருப்பதே “சின்முத்திரை”!

இப்படி சின்முத்திரை பிடித்தநிலையில் கை பெருவிரல் மத்தியிலுள்ள கோடு வரை உள்ள இடமே நம் கண் அளவு! வைத்துப் பாருங்கள்! சின்முத்திரை – கண்போல தோன்றும்! அதாவது இறைவன் மனித தேகத்தில் கண்ணில் ஜோதியாக துலங்குகிறான் என்பதே மாபெரும் ஞான இரகசியாமாம்!

Tuesday 9 July 2013

பிறப்பின் இரகசியம்.

மனிதன்! உயிர் இருந்தால் தான்? இல்லையேல் பிணம்!

மனிதர்களாகிய நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம்! இல்லையேல் நாம் சவம்!

உயிர் இருந்தால் தான் வாழ்வு! உயிர் உடலைவிட்டு போய்விட்டால்? சாவுதான்!

உடலும் உயிரும் சேர்ந்திருந்தாலே பிரயோஜனம்! பிரிந்திருந்தால் இயக்கம் இல்லை! உடலோடு உயிர் இருந்தாலே இயக்கம்!

உடலைவிட உயிரே முக்கியமானது!

உயிர் உடலுடன் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன்.

இப்படி “தலை கால்” தெரியாமல் ஆடுபவனெல்லாம் அடிமுட்டாள்களே!

ஒருவன் எப்படி பிறக்கிறான்?

பிறப்பு என்றால் என்ன? ஏன் பிறக்கிறான்?

இதுதான் “தேவரகசியம்”. பிறப்பின் இரகசியம்.

ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறந்து விடுமா? நடக்காது!?

இன்றைக்கும் குழந்தையில்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்களே?

விஞ்ஞான வளர்ச்சி, டெஸ்ட்டியுப் குழந்தை உருவானது. ஆயிரம் பல்லாயிரம் முயற்சி செய்தால் ஒன்று உருவாகிறது! எல்லாம் ஜனிப்பதில்லை! எல்லோராலும் முடியாது!

விஞ்ஞானம் ஒரு வரையரைக்கு உட்பட்டதே! இன்றைய உலக வளர்ச்சி விஞ்ஞானத்தின் பரிமாணம் தான் மறுக்க முடியாது!

பஞ்சபூதங்களை அப்படி இப்படி, எதையாவது செய்து ஏதோதோ கண்டுபிடித்து சுகபோகமாக வாழ வழி கண்டனர் பலர்!

எல்லோரும் இந்த பூமியில் உள்ளவர்கள் தானே! இந்த பூமியில்தானே பிறந்தார்கள், இந்த பூமியில் தானே, எப்படியெப்படியோ வாழ்ந்து மடிந்தார்கள்.

இந்த மனிதர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? பூமியில் கொஞ்சகாலம் வாழ்ந்தார்கள்! எல்லோரும் – பெரும்பாலானவர்கள் இறந்துபோயினர்! இறந்து அவர்கள் போனது எங்கே!?

பிறந்தவர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? இறந்தவர்கள் எங்கு போனார்கள்? பிறந்தபோது வந்த உடல், இறந்தபோதும் இருக்கின்றதே?

அப்டியானால் பிறப்பு இறப்பு உடலுக்கு இல்லையே?! பின் எதற்கு? உயிர்கொண்டு உடல் வந்தாலே பிரயோஜனம்! உயிர் இன்றி உடல் இருந்தால் மண்தான்!.

உயிர்தான் பிரதானம்! உயிர்தான் பிறக்கிறது உடல் கொண்டு! உடலைவிட்டு உயிர் பிரிவதே மரணம்! பிறப்பும், இறப்பும் உயிர் வருவதும் போவதும் தான்!

நம்மை ஈன்ற தாய் நமக்கு கொடுத்தது உடல் மட்டுமே! அன்னையின் உடலில் உடலிலிருந்து மாதந்தோறும் வெளியேறும் உதிரமே, அன்னை தந்தையின் சுரோணித சுக்கில சேர்க்கையால் உருண்டு திரண்டு கருவாகி பிண்டம் உருவாகிறது!

தீட்டு என்கிறோமே – நம் உடலே தீட்டுதான்! நம் தாயின் தீட்டு தான் நாம்! மனிதன் மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளும் இப்படியே!

ஆணின் உயிர் சக்தி சுக்கிலம், பெண்ணின் உயிர் சக்தி சுரோணிதம் இரண்டும் சேர்ந்தால்தான் புதிய உயிர் தோன்றுவதற்கு அஸ்திவாரம்!

ஆணும் பெண்ணும், சிவமும் சக்தியும், பாஸிடிவ் நெகடிவ் சேர்ந்தாலே-இணைந்தாலே சக்தி பிறக்கும்-இயக்கம் ஆரம்பமாகும்!

தாயின் கருவிலே வயிற்றிலே உருவாகிறது பிண்டம், மூன்று மாதத்திற்கு பிறகு தான் உயிர் வருகிறது! இதுவே அற்புதம் கருவுக்கு உயிர் எப்படி வந்தது?

இங்கேதான் ஆரம்பிக்கிறது நமது மெய்ஞ்ஞானம்! தாயின் வயிற்றிலே குழந்தையின் உடல்தான் உருவாகிறது! உயிர் எல்லாம் வல்ல இறைவன் அருளால் வந்து சேர்க்கிறது!

இன்னாருக்கு இன்னார் வந்து பிறக்க வேண்டும் என்ற நியதி – விதி – கணக்கு எல்லாம் வல்லவன் வகுத்து வைத்தது! அவன் அருள் ஆக்ஞைபடியே உயிர் தாய் கருவிலே வருகிறது!

இதுவே தேவரகசியம்! எப்படி வருகிறது? யாரும் இதுவரை அறிந்திராத ஒன்று! இந்த காலத்தில் வருகிறது - வந்தது என்று அறியலாமே தவிர எப்படி வந்தது என அறிவார் இல்லை?!

“உயிர்” என்றால் என்ன? உயிர் எங்கிருந்தது? எப்படி உடலினுள் பிரவேசித்தது? உடலில் எங்கு இருக்கிறது? எந்த வடிவில் தன்மையில் இருக்கின்றது? இதையெல்லாம் அறிந்தவனே ஞானி!! அவனே சித்தன்!!

ஒரு சிசு தாயின் கருவிலே 10 மாதம் வளர்ந்து பூரணமாகிறது. ஒரு மாதம் என்பது 27 நாட்களே! 27 நட்சத்திரங்களே 1 மாதம். 10 மாதம் என்றால் 270 நாட்களே.

பிரசவ வலியே சிசுவின் பிரவேசத்திற்கு அறிகுறி! கன்னிக்குடத்திலே – குளத்திலே மிதந்து கொண்டு, ‘ஸ்டிரா” மூலம் குளிர்பானம் அருந்துவது போல, தொப்புள் கொடி மூலம் வேண்டிய உணவை தாயிடமிருந்து உறிஞ்சும் சிசு!

படைக்கும் பரமாத்மா உயிர்களை படைக்கும் ஆற்றல் இருக்கிறதே, அப்பப்பா அதிசயம்! அற்புதம்! எண்ணிப் பார்க்க இயலாத ஒப்பற்ற அதிஉன்னத செயலாகும்!

படைத்த பரமன் காக்க மாட்டானா? இறைவன் தான் நம்மை காப்பாற்றுகிறான்!! தாயின் கருவிலிருந்து எப்போதும் துணையாக இருந்து காப்பவன் இறைவன் மட்டுமே! கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் படியளப்பவன் காப்பவன் இறைவன் ஒருவனே!

நம்மை படைத்து காப்பவன் நம்மிடமிருந்து, நான் யார்? ஏன் பிறந்தேன்? எப்படி பிறந்தேன்? இதுபோன்ற எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமறியா குழந்தையாக்கி உலகில் விட்டுவிடுகிறான்! என்னே! அவனின் திருவிளையாடல்!

பிறப்பிக்க வைத்த அந்த இறைவனே எல்லா உயிர்களுக்கும் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிப்படுத்திக் காட்டு கின்றான்! ஆனால் அறிவோர் உணர்வோர் வெகுசிலரே! எல்லாம் வல்ல அந்த இறைவனே கருணையே உருவானவன்! அருங்கடல்! எல்லா உயிர்களும் தன்னை அடைய அருள்மழை பொழிகிறான்! மனிதனாக பிறக்கும் அனைவருக்கும் இறைவன் அருளும் அரிய சந்தர்ப்பம் இது!

மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும் எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர் வினைக்கு ஏற்ப வாழ்வை முடித்தும் வைக்கிறான்! அதாவது உடலை அழித்து அல்லது மாற்றி அவரவர் பரிபக்குவத்திற்குக்கேற்ற நிலையை தந்தருள்கிறார்!

எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே!
அவரே படைக்கிறார் அப்போது அவர் பிரம்மா!

அவரே காக்கிறார் அப்போது அவர் விஷ்ணு!

அவரே மறைக்கிறார் அப்போது அவர் மகேஸ்வரன்!

அவரே அருள்கிறார் அப்போது அவர் சதாசிவன்!

அவரே அழிக்கிறார் அப்போது அவரே ருத்திரன்!

ஆக ஏக இறைவனே எல்லாம் புரிகிறார்!

எல்லாமே அவன் செயலே!

அவனின்றி ஓர் அணுவும் அசையாது!

அணுவுக்கும் அணுவாக இருந்து எல்லாம் புரிந்து ஆள்வதும் அருள்வதும் அவன் திருவிளையாடல்களே! அற்புதங்களே!

அனுவுக்கு அனுவானவன், எல்லாம் ஆனவனே, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனே, அண்ட பகிரண்டமெங்கும் ஒளியாக ஒளிர்பவனே, நம் உயிராகவும் உள்ளான்!?

அணுவுக்கு அணுவாக ஒளிர்பவன் மனித உடலினுள் பலகோடி அணுத்துகள்கள் உள்ளத்தில் இல்லாமல் போவானா?! எங்கும் இருக்கும் இறைவன், தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் இருக்கிறான் “உயிராக”!!

இதுவே ஆதிகாலம் தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை! வேதங்களில் சொல்லப்பட்ட இறை இரகசியம்! “அகம் பிரம்மாஸ்மி”.

இறைவன் பரமாத்மா பரம்பொருள் பெரும்ஜோதி ஆண்டவன் தானே சிறுஜோதியாக தன்னை குறுக்கிக் கொண்டு ஜீவாத்மாவாக உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார்! நம் உள் மனம் கடந்த நிலையில் இருப்பதால் தான், உள்கடந்து இருப்பதால் தான் ஆன்றோர் கடவுள் என்றனர்!

கட உள்ளே கடத்தினுள்ளே, உன் உடலினுள்ளே என்றுதான் இதற்கு பொருள்! கடவுளே என்று உலகத்திலே தேடுபவன் காண்பது அரிது! கடவுளே என்று உடலிலே தேடுபவன் காண்பான் கண்களினாலேயே! வெளியிலே தேடுவது பக்தி! உடலுள்ளே தேடுவது ஞானம்!

இறைவன் கூப்பிடுதூரத்தில் உள்ளான் கைக்கெட்டின இடத்தில் இருக்கிறான் என்பர் பெரியோர்கள்! நம் உடலே இறைவன் வாழும் ஆலயம்! ஜீவர்களே நடமாடும் சிவம்!

கட உள்ளே

மனிதன்! உயிர் இருந்தால் தான்? இல்லையேல் பிணம்!

மனிதர்களாகிய நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம்! இல்லையேல் நாம் சவம்!

உயிர் இருந்தால் தான் வாழ்வு! உயிர் உடலைவிட்டு போய்விட்டால்? சாவுதான்!

உடலும் உயிரும் சேர்ந்திருந்தாலே பிரயோஜனம்! பிரிந்திருந்தால் இயக்கம் இல்லை! உடலோடு உயிர் இருந்தாலே இயக்கம்!

உடலைவிட உயிரே முக்கியமானது!

உயிர் உடலுடன் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன்.

இப்படி “தலை கால்” தெரியாமல் ஆடுபவனெல்லாம் அடிமுட்டாள்களே!

ஒருவன் எப்படி பிறக்கிறான்?

பிறப்பு என்றால் என்ன? ஏன் பிறக்கிறான்?

இதுதான் “தேவரகசியம்”. பிறப்பின் இரகசியம்.

ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறந்து விடுமா? நடக்காது!?

இன்றைக்கும் குழந்தையில்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்களே?

விஞ்ஞான வளர்ச்சி, டெஸ்ட்டியுப் குழந்தை உருவானது. ஆயிரம் பல்லாயிரம் முயற்சி செய்தால் ஒன்று உருவாகிறது! எல்லாம் ஜனிப்பதில்லை! எல்லோராலும் முடியாது!

விஞ்ஞானம் ஒரு வரையரைக்கு உட்பட்டதே! இன்றைய உலக வளர்ச்சி விஞ்ஞானத்தின் பரிமாணம் தான் மறுக்க முடியாது!

பஞ்சபூதங்களை அப்படி இப்படி, எதையாவது செய்து ஏதோதோ கண்டுபிடித்து சுகபோகமாக வாழ வழி கண்டனர் பலர்!

எல்லோரும் இந்த பூமியில் உள்ளவர்கள் தானே! இந்த பூமியில்தானே பிறந்தார்கள், இந்த பூமியில் தானே, எப்படியெப்படியோ வாழ்ந்து மடிந்தார்கள்.

இந்த மனிதர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? பூமியில் கொஞ்சகாலம் வாழ்ந்தார்கள்! எல்லோரும் – பெரும்பாலானவர்கள் இறந்துபோயினர்! இறந்து அவர்கள் போனது எங்கே!?

பிறந்தவர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? இறந்தவர்கள் எங்கு போனார்கள்? பிறந்தபோது வந்த உடல், இறந்தபோதும் இருக்கின்றதே?

அப்டியானால் பிறப்பு இறப்பு உடலுக்கு இல்லையே?! பின் எதற்கு? உயிர்கொண்டு உடல் வந்தாலே பிரயோஜனம்! உயிர் இன்றி உடல் இருந்தால் மண்தான்!.

உயிர்தான் பிரதானம்! உயிர்தான் பிறக்கிறது உடல் கொண்டு! உடலைவிட்டு உயிர் பிரிவதே மரணம்! பிறப்பும், இறப்பும் உயிர் வருவதும் போவதும் தான்!

நம்மை ஈன்ற தாய் நமக்கு கொடுத்தது உடல் மட்டுமே! அன்னையின் உடலில் உடலிலிருந்து மாதந்தோறும் வெளியேறும் உதிரமே, அன்னை தந்தையின் சுரோணித சுக்கில சேர்க்கையால் உருண்டு திரண்டு கருவாகி பிண்டம் உருவாகிறது!

தீட்டு என்கிறோமே – நம் உடலே தீட்டுதான்! நம் தாயின் தீட்டு தான் நாம்! மனிதன் மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளும் இப்படியே!

ஆணின் உயிர் சக்தி சுக்கிலம், பெண்ணின் உயிர் சக்தி சுரோணிதம் இரண்டும் சேர்ந்தால்தான் புதிய உயிர் தோன்றுவதற்கு அஸ்திவாரம்!

ஆணும் பெண்ணும், சிவமும் சக்தியும், பாஸிடிவ் நெகடிவ் சேர்ந்தாலே-இணைந்தாலே சக்தி பிறக்கும்-இயக்கம் ஆரம்பமாகும்!

தாயின் கருவிலே வயிற்றிலே உருவாகிறது பிண்டம், மூன்று மாதத்திற்கு பிறகு தான் உயிர் வருகிறது! இதுவே அற்புதம் கருவுக்கு உயிர் எப்படி வந்தது?

இங்கேதான் ஆரம்பிக்கிறது நமது மெய்ஞ்ஞானம்! தாயின் வயிற்றிலே குழந்தையின் உடல்தான் உருவாகிறது! உயிர் எல்லாம் வல்ல இறைவன் அருளால் வந்து சேர்க்கிறது!

இன்னாருக்கு இன்னார் வந்து பிறக்க வேண்டும் என்ற நியதி – விதி – கணக்கு எல்லாம் வல்லவன் வகுத்து வைத்தது! அவன் அருள் ஆக்ஞைபடியே உயிர் தாய் கருவிலே வருகிறது!

இதுவே தேவரகசியம்! எப்படி வருகிறது? யாரும் இதுவரை அறிந்திராத ஒன்று! இந்த காலத்தில் வருகிறது - வந்தது என்று அறியலாமே தவிர எப்படி வந்தது என அறிவார் இல்லை?!

“உயிர்” என்றால் என்ன? உயிர் எங்கிருந்தது? எப்படி உடலினுள் பிரவேசித்தது? உடலில் எங்கு இருக்கிறது? எந்த வடிவில் தன்மையில் இருக்கின்றது? இதையெல்லாம் அறிந்தவனே ஞானி!! அவனே சித்தன்!!

ஒரு சிசு தாயின் கருவிலே 10 மாதம் வளர்ந்து பூரணமாகிறது. ஒரு மாதம் என்பது 27 நாட்களே! 27 நட்சத்திரங்களே 1 மாதம். 10 மாதம் என்றால் 270 நாட்களே.

பிரசவ வலியே சிசுவின் பிரவேசத்திற்கு அறிகுறி! கன்னிக்குடத்திலே – குளத்திலே மிதந்து கொண்டு, ‘ஸ்டிரா” மூலம் குளிர்பானம் அருந்துவது போல, தொப்புள் கொடி மூலம் வேண்டிய உணவை தாயிடமிருந்து உறிஞ்சும் சிசு!

படைக்கும் பரமாத்மா உயிர்களை படைக்கும் ஆற்றல் இருக்கிறதே, அப்பப்பா அதிசயம்! அற்புதம்! எண்ணிப் பார்க்க இயலாத ஒப்பற்ற அதிஉன்னத செயலாகும்!

படைத்த பரமன் காக்க மாட்டானா? இறைவன் தான் நம்மை காப்பாற்றுகிறான்!! தாயின் கருவிலிருந்து எப்போதும் துணையாக இருந்து காப்பவன் இறைவன் மட்டுமே! கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் படியளப்பவன் காப்பவன் இறைவன் ஒருவனே!

நம்மை படைத்து காப்பவன் நம்மிடமிருந்து, நான் யார்? ஏன் பிறந்தேன்? எப்படி பிறந்தேன்? இதுபோன்ற எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமறியா குழந்தையாக்கி உலகில் விட்டுவிடுகிறான்! என்னே! அவனின் திருவிளையாடல்!

பிறப்பிக்க வைத்த அந்த இறைவனே எல்லா உயிர்களுக்கும் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிப்படுத்திக் காட்டு கின்றான்! ஆனால் அறிவோர் உணர்வோர் வெகுசிலரே! எல்லாம் வல்ல அந்த இறைவனே கருணையே உருவானவன்! அருங்கடல்! எல்லா உயிர்களும் தன்னை அடைய அருள்மழை பொழிகிறான்! மனிதனாக பிறக்கும் அனைவருக்கும் இறைவன் அருளும் அரிய சந்தர்ப்பம் இது!

மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும் எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர் வினைக்கு ஏற்ப வாழ்வை முடித்தும் வைக்கிறான்! அதாவது உடலை அழித்து அல்லது மாற்றி அவரவர் பரிபக்குவத்திற்குக்கேற்ற நிலையை தந்தருள்கிறார்!

எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே!
அவரே படைக்கிறார் அப்போது அவர் பிரம்மா!

அவரே காக்கிறார் அப்போது அவர் விஷ்ணு!

அவரே மறைக்கிறார் அப்போது அவர் மகேஸ்வரன்!

அவரே அருள்கிறார் அப்போது அவர் சதாசிவன்!

அவரே அழிக்கிறார் அப்போது அவரே ருத்திரன்!

ஆக ஏக இறைவனே எல்லாம் புரிகிறார்!

எல்லாமே அவன் செயலே!

அவனின்றி ஓர் அணுவும் அசையாது!

அணுவுக்கும் அணுவாக இருந்து எல்லாம் புரிந்து ஆள்வதும் அருள்வதும் அவன் திருவிளையாடல்களே! அற்புதங்களே!

அனுவுக்கு அனுவானவன், எல்லாம் ஆனவனே, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனே, அண்ட பகிரண்டமெங்கும் ஒளியாக ஒளிர்பவனே, நம் உயிராகவும் உள்ளான்!?

அணுவுக்கு அணுவாக ஒளிர்பவன் மனித உடலினுள் பலகோடி அணுத்துகள்கள் உள்ளத்தில் இல்லாமல் போவானா?! எங்கும் இருக்கும் இறைவன், தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் இருக்கிறான் “உயிராக”!!

இதுவே ஆதிகாலம் தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை! வேதங்களில் சொல்லப்பட்ட இறை இரகசியம்! “அகம் பிரம்மாஸ்மி”.

இறைவன் பரமாத்மா பரம்பொருள் பெரும்ஜோதி ஆண்டவன் தானே சிறுஜோதியாக தன்னை குறுக்கிக் கொண்டு ஜீவாத்மாவாக உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார்! நம் உள் மனம் கடந்த நிலையில் இருப்பதால் தான், உள்கடந்து இருப்பதால் தான் ஆன்றோர் கடவுள் என்றனர்!

கட உள்ளே கடத்தினுள்ளே, உன் உடலினுள்ளே என்றுதான் இதற்கு பொருள்! கடவுளே என்று உலகத்திலே தேடுபவன் காண்பது அரிது! கடவுளே என்று உடலிலே தேடுபவன் காண்பான் கண்களினாலேயே! வெளியிலே தேடுவது பக்தி! உடலுள்ளே தேடுவது ஞானம்!

இறைவன் கூப்பிடுதூரத்தில் உள்ளான் கைக்கெட்டின இடத்தில் இருக்கிறான் என்பர் பெரியோர்கள்! நம் உடலே இறைவன் வாழும் ஆலயம்! ஜீவர்களே நடமாடும் சிவம்!

Wednesday 20 March 2013

கண்திறந்து கண்மணி உணர்வோடு

கண் மூடி செய்யும் எந்த ஆன்மிக சாதனையும் தியானமோ , தவமோ ஆகாது.

கண்மூடிட்டான் என்று தமிழில் இறந்தவரையே கூறிப்பிடுவர்.
கண்மூடி பழக்கம் என்று தவறான பழக்கத்தை கூறிப்பர்.

கண்திறந்து கண்மணி உணர்வோடு கண் ஒளி கொண்டு உள் செல்வது தவம். இந்த உணர்வை தன கண் ஒளி கொண்டு கொடுப்பவர் தான் உண்மை சற்குரு. இதற்கு உதாரணங்கள்

அகத்தியர் கண் மூடி தவம் செய்பவரை மூடர்கள் என்று சாடுகிறார்.
http://tamil.vallalyaar.com/?p=2384
http://tamil.vallalyaar.com/?p=1800
http://tamil.vallalyaar.com/?p=1444

கண்முடி செய்யும் தியானத்தை திருமூலரும் சாடுகிறார் :

"குருடும் குருடும் சேர்ந்து குருடாட்டம் ஆடி குழியில் விழுந்தவாரே" - திருமந்திரம்.

கண் மோடி தியானம் செய்ய கற்றுகொடுபவர்களும் அதை நம்பி அவர் சொல்வதை செய்யும் சீடர்களும் குருடர்கள் என்றும் அவர்கள் கடைசியில் சேருமிடம் மரணகுழியே என்பது தான் இதன் அர்த்தம்.

மேலும் வள்ளலார் கண் மூடி பழக்கம் எல்லாம் மண் மூடி போக என்கிறார்.

அகத்தியரும், வள்ளலார், சித்தர்களும் சொல்வதை கேட்பீரா? அல்லது இன்றைய அரை வேற்காடு சாமியார்களை நம்புவீர்களா சிந்திபீர்!

Friday 15 March 2013

திருவடி தீட்சை என்றால் என்ன?

எட்டு (8), இரண்டு (2) எதை குறிக்கிறது?

நமது வலது கண் 8 என்றும், இடது கண் 2 ஆகவும் குறிப்பிடபடுகிறது.
வலது கண் – அ , இடது கண் – ௨
வலது கண் – சூரியன் , இடது கண் -சந்திரன்.
வலது கண் – சிவம் , இடது கண் – சக்தி
வலது கண் – சக்கரம் , இடது கண் – சங்கு

 திருவடி தீட்சை என்றால் என்ன? 










தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால் தூண்டுவதே தீட்சை.
தீட்சையின் மூலம் தன் கண்ணில் – கண் மணியில் உணர்வு பெறுகிறான் சீடன்.

நம் கண்மணியை கிருஷ்ண மணி என்பர். தகுந்த ஞான சற்குருவின் மூலம் நம் கிருஷ்ண மணியில் உணர்வு பெறுவதே கிருஷ்ண உணர்வு. இந்த உணர்வை பெறுவதே தீட்சை. இதை தான் சித்தர்கள் “தொடாமல் தொடுவது” , “உணர்வால் உணர வைப்பது” என்றனர்.

நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரிரம் தீட்சையின் மூலம் பிறக்கிறது. இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே தாய் தந்தை ஆகிறார்.
“அக்னியின் மூலம் ஞானஸ்தானம்” என்று பைபிள் இதையே கூறிப்பிடுகிறது. இயேசு நாதர் அக்னியால் வழங்கியே ஞானஸ்தானம் இதுவே.

தீட்சை பெற்றவனே துவிசன் ஆகிறான். துவிசன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று பொருள். இதையே பைபிள் “மறுபடி பிறவாதவன் பரலோக சம்ராட்சியத்தில் பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை” என்று கூறுவதும் இதையே.
மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.


தீட்சை பெற என்ன தகுதி வேண்டும்?

தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம். தீட்சை பெற முக்கிய தகுதி :
1 . சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
2 . போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே விடு நீங்க வேண்டும்.
3 . ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.
சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா பாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும்.இப்பழக்கங்கள் இருப்பின் உடனடியாக இவைகளை கைவிட்டு , இனி இவைகளை செய்வதில்லை என சங்கல்பம் செய்து கொண்டு பின் தீட்சை பெறலாம்.

தவம் செய்வது எப்படி?
தவம் என்றால் மந்திர ஜபம் அல்ல. தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்பதோ அல்ல. தவம் என்றால் பிரணாயாமமோ அல்ல. தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல.

கண்மூடி செய்யும் எந்த செயலும் தவம் ஆகாது. கண்களை திறந்து தான் “விழி திறந்து” தான் தவம் செய்ய வேண்டும்.

இறைவன் திருவடியில்(நம் கண்ணில்- கண் மணியில் – கண்மணி ஒளியில்) மனதினை நிறுத்துவதே தவமாகும். சும்மா இரு என்பதன் அர்த்தம் இதுவே. அதாவது நம் மனதை திருவடியில் வைத்து இருப்பதே. குரு தீட்சை பெற்று நம் கண்ணில் உணர்வு பெற்று அதை நினைத்து நினைத்து உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும்.

இங்நனம் தவம் தொடர்ந்தால் பலவித அனுபவங்கள் நாம் பெறலாம். நமது வள்ளல் பெருமான் ஞான சரியையில் கூறியபடி நாம் இவ்வாறு தவம் செய்தால் பெறலாம் நல்ல வரமே. நம் வினைகள் எல்லாம் எரிந்து விடும். பெறலாம் மரணமிலா பெருவாழ்வே. பிறவாப்பெருநிலை. அருட்பெரும் ஜோதி இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும் ஒளியாகி இணையலாம். பேரின்பம் பெறலாம்.

மெய்பொருள், திருவடி என்பது என்ன?

மெய்பொருள், திருவடி என்பது என்ன?
 
இறைவன் திருவடியை பற்றி பாடாத ஞானிகளே இல்லை.
“நின் திருவடியை மறவாத மனமே வேண்டும்” என்றும் எல்லா மகான்களும் ஆண்டவனை வேண்டினர்.

ஜோதி வடிவான இறைவனின் திருவடி எது? எங்கும் நிறைந்த இறைவன் நம் உயிருக்கு ஒளியாக – ஒளிக்கு ஒளியாய் உள்ளான்.

மேலும் நம் கண்களில் ஒளியாக துலங்குகிறான்.

நம்மை அறிய , இறைவனை உணர திருவடியையே பற்ற வேண்டும். நாம் இறைவனை தேடி அலைய கூடாது என்பதற்காக நம் கண்ணனுக்கு எட்டிய தூரத்திலே கண்ணிலே இறைவன் ஒளியாக துலங்குகிறான்.

இந்த ஜீவ ஒளியை தாங்குவதால் நம் கண்களே இறைவன் திருவடி. மெய்யான பொருளை கொண்டு உள்ளதால் கண்களே மெய்பொருள்.

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் -  Click Here
திருவருட்பாவில் வள்ளலார் – Click Here
திருமந்திரத்தில் திருமூலர் -  Click Here
திருக்குறளில் திருவள்ளுவர் – Click Here
சித்தர்கள் திருவடி - Click Here

நம் உடலில் உயிர் எங்கு உள்ளது?

நம் உடலில் உயிர் எங்கு உள்ளது?
 
“எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்”. நம் உயிர் நம் தலையின் நடுவில் அதாவது , நம் தலை உச்சிக்கு கீழ் நம் உண்ணாவுக்கு மேல் நம் இருகண்ணும் உள்ளே சேரும் இடத்தில் இருக்கிறது. அது துலங்குவது இரு கண்களில்.
நமது சிரசில் உச்சியில் இருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது. அது நமது கண் காது மூக்கு உள்ளே சேரும் மத்தியில், வாயில் உள் அண்ணாக்குவின் சற்று மேல் வந்து நிலைகொண்டு , அங்கிருந்து இரு நாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்கிறது. இவ்விடத்தை லல்லாடஸ்தானம் , ஆன்ம ஸ்தானம், பத்தாம் வாசல், கடை கண் என்று சித்தர்கள் கூறுவர்.
“உச்சிக்கு கீழ் உண்ணாவுக்கு மேல் அணையா விளக்கு நிதம் எரியுதடி” – சித்தர் பாடல்.”மையமர் கண்டன்” என்று மாணிக்கவாசகரும் தலையின் மத்தியில் உயிர் உள்ளதை கூறிப்பிடுகிறார்